Kathir News
Begin typing your search above and press return to search.

ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை!

ஆல்கொண்டமால் கோவில் கோசாலை அமைக்க வேண்டும் பக்தர்களின் கோரிக்கை.

ஆல்கொண்டமால் கோவிலில் கோசாலை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  22 May 2022 2:10 AM GMT

உடுமலையில் அமைந்துள்ள ஆல்கொண்டமால் கோவிலுக்கு பக்தர்களால் தானமாக வழங்கப்படும் பசு மாடுகளைப் பராமரிக்கும் கோசாலை துவங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். மேலும் உடுமலை சோமவாரப்பட்டி அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவில் பக்தர்கள் காணிக்கையாக பல்வேறு கால்நடைகளையும் தானமாக வழங்கப்படுகிறது. மின்தடை திங்களன்று கால்நடைகள் ஈன்றெடுக்கும் கன்றுகள், ஆல்கொண்டமாலனுக்கு சொந்தம் என்ற நம்பிக்கை அப்பகுதி மக்களிடையே உள்ளது.


இதன் காரணமாக பொங்கல் திருவிழாவை ஒட்டி கோவில்களுக்கு ஏராளமான கன்றுகளை பக்தர்கள் தானமாக தருகிறார்கள். ஆனால் இந்த கோவிலில் தற்போது கால்நடைகளைப் பராமரிக்கும் சாலை இல்லாததன் காரணமாக இரண்டு நாட்களில் மட்டும் கோவிலில் வைத்திருந்த பிறகு வேறு கோயில்களில் உள்ள மாற்று தொழுபவர்களுக்கு அதை அனுப்புகிறார்கள். இதன் காரணமாக இந்த கோவிலில் பக்தர்கள் கோசாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது முன்வைத்துள்ளார்கள்.


மேலும் இதற்கான கட்டண செலவாக ரூபாய் ஆயிரத்துக்கும் மேல் கட்டணமாக பக்தர்களிடமிருந்து இந்து சமய அறநிலைத்துறை வசூல் செய்கிறது குறிப்பிடத்தக்கது. கன்றுகளை விற்று அதில் கிடைக்கும் தொகையை கோவில் உண்டியலில் செலுத்துகின்றார்கள். ஆண்டுதோறும் சராசரியாக 50 க்கு மேற்பட்ட கால்நடைகள் தானமாக இந்த கோவிலுக்கு வழங்கப்படுகின்றன. இந்த சமயத்துறையில் கோவில் அருகல் கோ சாலை அமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

Input & Image courtesy: Dinamalar News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News