Kathir News
Begin typing your search above and press return to search.

மத்திய பிரதேசத்தை அதிர வைத்த ஆணவக் கொலை

மத்திய பிரதேசத்தில் இளம் காதல் ஜோடியை சுட்டுக்கொன்று கல்லைக்கட்டி ஆற்றல் வீசிய கொடூரம் நடந்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தை அதிர வைத்த ஆணவக் கொலை

KarthigaBy : Karthiga

  |  21 Jun 2023 9:55 AM GMT

மத்திய பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள ரத்தன்பசாய் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஷிவானி இவரும் அருகில் உள்ள பாலுபுரா கிராமத்தைச் சார்ந்த ராஜசேகர் என்ற வாலிபரும் காதலித்து வந்தனர் .அவர்கள் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் என்றபோதும் அவர்களின் காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


எந்த நிலையில் கடந்த மூன்றாம் தேர்வு முதல் இளம் பெண் ஷிவானியும் வாலிபர் ராதேஷ்யாமும் மாயமாகிவிட்டனர். இது குறித்து ராதேஷ்யாம் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். ஷிவானியின் குடும்பத்தினர் தான் அவர்களை கொலை செய்திருக்க வேண்டும் என்று குற்றம் சாட்டினர் . ஆனால் காதல் ஜோடி வேறு ஊருக்கு ஓடிச் சென்று இருக்கலாம் என்று முதலில் கூறிய போலீசார் வாலிபர் குடும்பத்தினரின் தொடரில் வற்புறுத்தலால் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


இளம்பெண்ணின் குடும்பத்தினரிடம் அவர்கள் துருவி துருவி விசாரித்தனர். அப்போது ஷிவானியின் தந்தை ராஜ் பால் சிங் தோமர் தாங்கள்தான் கடந்த மூன்றாம் தேதி காதல் ஜோடியே துப்பாக்கியால் சுட்டு கொன்றோம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார் . மேலும் அன்று இரவு தானும் தமது குடும்பப் பெண்களும் சேர்ந்து காதல் ஜோடியின் உடல்களுடன் கனமான கற்களை கட்டி முதலைகள் நிறைந்த சம்பால் ஆற்றில் வீசிவிட்ட தாகவும் தெரிவித்தார் .


இதை அடுத்து அந்த ஆற்றில் காதல் ஜோடியின் உடல்களை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்ப படையினரையும் நீச்சல் வீரர்களையும் போலீசார் ஈடுபடுத்தி உள்ளனர். கொலை நடந்த 15 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் நிலையில் காதல் ஜோடியின் உடல்கள் முதலைகளுக்கு அல்லது மீன்களுக்கு இரையாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. காதல் ஜோடியின் உடல்கள் கிடைத்தால் தான் ஒரு முடிவுக்கு வர முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆணவக் கொலை மத்திய பிரதேசத்தை அதிர வைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News