Kathir News
Begin typing your search above and press return to search.

பனிக்காலத்தில் ஏற்படும் இருமலை எதிர்த்து போராடும் வழிகள் !

How to get immediate relief from cold & cough.

பனிக்காலத்தில் ஏற்படும் இருமலை எதிர்த்து போராடும் வழிகள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  19 Dec 2021 12:31 AM GMT

குளிர்காலம் வந்துவிட்டதால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பொதுவான ஒன்றாக மாறிவிடும். இரவில் ஏற்படும் இருமல் நீங்கள் தூங்குவதை கடினமாக்கும். சில சக்திவாய்ந்த வீட்டு வைத்தியங்கள் இருமலை எதிர்த்துப் போராடவும் இயற்கையான முறையில் சிகிச்சையளிக்கவும் உதவும். இது போன்ற வறட்டு இருமலால் நீங்கள் ஆவதிப்படுகிறீர்கள் என்றால் உங்களுக்கு சில வீட்டு வைத்தியங்கள் இங்கே உள்ளன. இருமலுக்கு மிகவும் பொதுவான காரணம் சுவாசக்குழாய் தொற்று ஆகும்.


இது பொதுவாக வைரஸால் ஏற்படுகிறது மற்றும் சில நாட்கள் முதல் ஒரு வாரம் வரை நீடிக்கும். காய்ச்சலால் ஏற்படும் தொற்றுகள் குணமடைய சிறிது நேரம் ஆகலாம் மற்றும் சில சமயங்களில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படலாம். இருமலை எதிர்த்துப் போராட உதவும் சக்தி வாய்ந்த பண்புகள் இஞ்சியில் உள்ளன. ஃபிரஷான இஞ்சி துண்டுகளுடன் இஞ்சி தேநீர் தயாரிக்கலாம். தேனுடன் சில துளிகள் இஞ்சி சாற்றையும் கலந்து கொள்ளலாம். சிறிய அளவில் தூங்கும் முன் இதை உட்கொள்ளவும். இந்த கலவையானது மூன்று முதல் நான்கு நாட்களில் மட்டுமே பயனுள்ள முடிவுகளைத் தரும்.


மஞ்சள் தேநீர் முயற்சி செய்ய மற்றொரு நல்ல வழி. படுக்கைக்குச் செல்வதற்கு முன் நீங்கள் ஒரு கப் தேநீர் குடிக்கலாம். இது சளி மற்றும் இருமல் அறிகுறிகளில் இருந்து உங்களுக்கு இயற்கையான நிவாரணம் தரும். துளசி தேநீர் அல்லது பல மூலிகை டீகள் இருமலை எதிர்த்துப் போராடுவதற்கு நன்மை பயக்கும். தேன் பல வழிகளில் உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. இது நிச்சயமாக உங்கள் குளிர்கால உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். சளி மற்றும் இருமல் வரும்போது நீராவி என்பது பலரால் பரிந்துரைக்கப்படும் சிறந்த வீட்டு வைத்தியம். இது உங்களுக்கு விரைவான மற்றும் உடனடி நிவாரணம் அளிக்கும். நீராவி அடைக்கப்பட்ட மூக்கில் இருந்து நிவாரணம் தரும்.

Input & Image courtesy: Healthline




Next Story
கதிர் தொகுப்பு
Trending News