Kathir News
Begin typing your search above and press return to search.

IAS பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்து விரோத பிரச்சாரம்: ஆசிரியையின் சர்ச்சையான கருத்து!

விஷன் IAS UPSC பயிற்சி என்ற போர்வையில் இந்து விரோத பிரச்சாரத்தை வெளிப்படையாக செய்யும் விரிவுரையாளர் ஸ்மிருதி ஷா.

IAS பயிற்சி மையத்தில் நடைபெறும் இந்து விரோத பிரச்சாரம்: ஆசிரியையின் சர்ச்சையான கருத்து!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 March 2022 1:17 AM GMT

UPSC பயிற்சி அகாடமியைச் சேர்ந்த ஒரு ஆசிரியரின் வீடியோ Vision IAS சமூக ஊடகங்களில் பரவியபோது ஒரு சர்ச்சை வெடித்தது. அதில் விரிவுரையாளர் ஸ்மிருதி என்பவர் தன்னுடைய வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தும் போனதோ இந்து விரோதப் பிரச்சாரங்களை பலமாக, நேரடியாகவும் எடுத்துரைக்கிறார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தின. இன்னும் நாளைய இளைய தலைமுறையின் ஒரு தொடக்கமாக வகுப்பறைகள் இருக்கின்றன. எனவே அத்தகைய பெரும் வகுப்பறையில் இப்படிப்பட்ட அப்பட்டமான இந்து விரோத பிரச்சாரம் என்பது மக்களிடையே பெரும் கண்டிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் அவர் நடத்திய ஒரு வகுப்பறை பாடத்தில், 'பக்தி இயக்கத்தை' இந்தியாவில் இஸ்லாத்தின் எழுச்சியால் ஈர்க்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை என்று அழைத்ததைக் காண முடிகிறது. அவரது விரிவுரைகளின் போது இதுபோன்ற பல நிகழ்வுகளில், அப்பட்டமான இஸ்லாமிய பிரச்சாரம் மற்றும் அரசியல் மூளைச் சலவை ஆகியவை அடிக்கடி தூண்டப்பட்டதாக அறியப்பட்டது. கல்வி என்ற பெயரில் பொய்களைக் கூறுவதாகக் குற்றம் சாட்டுவது, விஷன் IAS ஆசிரியை ஸ்மிருதி ஷாவின் நுட்பமான மூளைச் சலவை இந்து மதத்தின் கீழ்மட்டத்தை நிலை நிறுத்தியது. விரிவுரையாளர் ஸ்மிருதி ஷா, சமூக ஊடகங்கள் முழுவதும் 'வெறுக்கத்தக்க ஆசிரியர்' என்று வெளிப்படையாக விமர்சிக்கப்படும் சில நிகழ்வுகளும் நடந்துள்ளன.


விஷன் ஐஏஎஸ் அகாடமியின் விரிவுரையாளர் ஸ்மிருதி ஷா தனது மாணவர்களிடம் பக்தி இயக்கத்தின் தோற்றம் பற்றி கேட்டபோது, "இஸ்லாம் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை, ஆனால் அது அதன் செல்வாக்கைக் காட்டத் தொடங்கியது. அது எந்தவிதமான இறுக்கமும் ஜாதி வெறியும் இல்லாமல் இருந்தது. ஒரே கடவுள் மீது முழுமையான பக்தியைப் பற்றி பேசும் இஸ்லாத்தின் ஒரு சிறப்பு இருந்தது. அவர்கள் ஒரே கடவுள் என்ற கருத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். உண்மையில் இருந்து வெகு தொலைவில், மேலும் அவர் இந்து மதத்தினுள் கீழ்-மேல் சமூக-கலாச்சார பக்தி இயக்கம் என்று வரைந்தார். மேலும் இவருடைய பல்வேறு தரப்பான விரிவுரையில் இந்துக்கள் மீது கடுமையான எதிர்ப்பையும் இவர் காட்டியுள்ளார். குறிப்பாக தீபாவளி பண்டிகையை இந்துக்கள் கொண்டாடுவதற்கான கருத்து, மகாபாரதத்தைப் பற்றிய கருத்துக்கள் போன்று பல்வேறு நிகழ்வுகள் மூலமாக இந்து விரோத பிரச்சாரத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தியுள்ளார்.

Input & Image courtesy:Oplndia news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News