Kathir News
Begin typing your search above and press return to search.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி

தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் - ஐகோர்ட் அதிரடி

KarthigaBy : Karthiga

  |  27 Oct 2022 2:45 PM GMT

தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்கள்,உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் , பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இந்த கலந்தாய்வுக்கு முன் தலைமை ஆசிரியர்கள் சிறப்பு இடமாற்ற கலந்தாய்வை நடத்த கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை தள்ளி வைக்க உத்தரவிட்டது. அதன்படி பதிவுகளுக்கான கலந்தாய்வு தள்ளி வைக்கப்பட்டது. இதை எதிர்த்து வனஜா உட்பட 41 இடைநிலை ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதே வேளையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும் என உத்தரவிடக்கோரி ஆசிரியர் சக்திவேல் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பதவி உயர்வு கலந்தாய்வை தள்ளி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த ஆசிரியர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் 'கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு பொருந்தாது என்பதால் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும் ' என வாதிட்டனர். ஆசிரியர் சக்திவேல் தலைப்பில் ஆஜரான வக்கீல், 'தகுதி இல்லாத ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கும் வகையில் பட்டியல் தயாரிக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என வாதாடினார்.


மத்திய மாநில அரசுகள் தரப்பில் 'கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தாலும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்' என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவில் கூறி இருப்பதாவது ஒரு கல்வி நிறுவனம் சிறந்த கல்வியை வழங்க அதன் ஆசிரியர்களின் தகுதியே காரணம். சிறந்த கல்வி தகுதியை பெறாத ஆசிரியர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது.கட்டாய கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பு பணியில் சேர்ந்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 9 ஆண்டுகள் அவசர அவகாசம் வழங்கப்பட்டது.அவர்களும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர்,தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவது குறித்த புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News