Kathir News
Begin typing your search above and press return to search.

இம்ரான் கானின் இப்போதைய நிலை என்ன? மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை!

இம்ரான் கானின் இப்போதைய நிலை என்ன? மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  8 Nov 2022 3:18 AM GMT

பேரணியில் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தது. முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பிடிஐ கட்சி இதற்கான ஏற்பாடுகளை செய்தது. இதில் பங்கேற்க குஜ்ரன்வாலா பகுதிக்கு சென்ற இம்ரான்கான் சென்றார். தொண்டர்கள் மத்தியில் லாரி மீது ஏறி உரையாற்றினார். அப்போது கூட்டத்தில் மறைந்திருந்த ஒருவர் இம்ரான் கான் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் இம்ரான் கானின் வலது காலில் 3 குண்டு பாய்ந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில், தொண்டர் ஒருவர் உயிரிழந்தார், 13 பேர் காயம் அடைந்தனர்.

ஆஸ்பிட்டலில் அட்மிட்

குண்டு பாய்ந்த இடத்தில் கட்டு போடப்பட்டு லாகூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு 2 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இம்ரான் கான்விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவின் தலைவர் டாக்டர் பைசல் சுல்தான் கூறினார்.

இப்போதைய நிலை

அறுவை சிகிச்சைக்குப் பின் இம்ரான் கான் நலமுடன் இருக்கிறார். இச்சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட படுகொலை முயற்சி. பாகிஸ்தான் அரசுக்குஎதிரான பேரணியை வசீராபாத்திலிருந்து மீண்டும் தொடர்வது குறித்து நாங்கள் அறிவிப்பு வெளியிடுவோம் என பிடிஐ கட்சியின் மூத்த தலைவர் ஃபாவத் சவுத்திரி கூறினார்.

Input From: NDTV

Next Story
கதிர் தொகுப்பு
Trending News