Begin typing your search above and press return to search.
2022-23-ம் நிதி ஆண்டில் நேரடி வருவருவாய் ரூபாய் 19.68 லட்சம் கோடியாக உயர்வு!
2022-23 -ம் ஆண்டில் நேரடி வரி வருவாய் 19.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

By : Karthiga
பெரு நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு, பொருளாதாரத்தின் ஆரோக்கிய நிலை காரணமாக நாட்டில் 2022-23 ஆம் நிதி ஆண்டில் மொத்த நேரடி வரி வருவாய் ரூபாய் 19.68 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. மறு நிதி அளிப்புக்கு முந்தைய இந்த வசூல் கடந்த நிதியாண்டின் மொத்த நேரடி வரி வருவாயான ரூபாய் 16.36 லட்சம் கோடியுடன் ஒப்பிடும்போது 20 புள்ளி மூன்று சதவீத அதிகரிப்பாகும்.
உலகளவில் பொருளாதார மந்த நிலை காணப்பட்ட போதிலும் இந்தியாவில் உள்நாட்டு தேவை அதிகரிப்பால் கொரோனாவுக்கு பிறகு பொருளாதாரம் சிறப்பாக மீட்சி கொண்டிருப்பதை இந்த வரி வருமானம் காட்டுகிறது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
