Kathir News
Begin typing your search above and press return to search.

மது விற்பனையில் அசத்தும் முதல்வரின் சொந்த மாவட்டம் - ரூ.10 கோடிக்கும் மேல் டாஸ்மாக் விற்பனையில் தட்டி தூக்கிய திருவாரூர் மாவட்டம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவாரூர் மாவட்டத்தில் ரூ.10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 86 லட்சம் கூடுதலாக மது விற்பனை நடந்துள்ளது.

மது விற்பனையில் அசத்தும் முதல்வரின் சொந்த மாவட்டம் - ரூ.10  கோடிக்கும் மேல் டாஸ்மாக் விற்பனையில் தட்டி தூக்கிய திருவாரூர் மாவட்டம்
X

KarthigaBy : Karthiga

  |  26 Oct 2022 5:31 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் 108 மது கடைகள் உள்ளன. சராசரியாக ஒரு நாளில் சுமார் ₹2 கோடிக்கு மது விற்பனை நடைபெறுவது வழக்கம். பண்டிகை நாட்களில் மது விற்பனை அதிகரிப்பது வழக்கம்.குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது மது பிரியர்கள் அதிகளவிலான மது வகைகளை வாங்கி செல்வது வழக்கம். இதனால் தீபாவளி பண்டிகையின் போதும் மதுக்கடைகளில் விற்பனை வழக்கத்தை விட அதிகம் இருக்கும்.


இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி திருவாரூர் மாவட்டம் மது கடைகளில் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. திருவாரூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாளில் 5 கோடியே 25 லட்சத்துக்கும், தீபாவளி பண்டிகை அன்று நான்கு கோடியே 81 லட்சத்திற்கும் என மொத்தம் 10 கோடியே 6 லட்சத்துக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது திருவாரூர் மாவட்டத்தில் ஒன்பது கோடியே 20 லட்சத்துக்கு மது விற்பனை நடந்தது. கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 86 லட்சத்துக்கு அதிகமாக மது விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








Next Story
கதிர் தொகுப்பு
Trending News