Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய அணியின் பெஸ்ட் பில்டர் யார் என கணித்த ஆஸ்திரேலியா வீரர்.!

இந்திய அணியின் பெஸ்ட் பில்டர் யார் என கணித்த ஆஸ்திரேலியா வீரர்.!

இந்திய அணியின் பெஸ்ட் பில்டர் யார் என கணித்த ஆஸ்திரேலியா வீரர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 1:11 PM GMT

இந்திய கிரிக்கெட் அணியின் பெஸ்ட் பீல்டர் யார் என்பதை கணித்து ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் முதலில் பீல்டிங்கில் சுறுசுறுப்பாக யாரும் இருக்கமாட்டார்கள். யுவராஜ் சிங் முகமது கைப் இவர்களுக்கு பிறகுதான் பீல்டிங்கில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. இந்த இருவரும் எதிரணியை ரன்களை விடாமல் வேகமாக சென்று பந்துகளை தடுப்பார்கள். இவர்கள் சிறப்பான கேட்ச்களை பிடித்து ரசிகர்களிடம் பெரும் பாராட்டைப் பெறுவார்கள்.

மேலும் தோனி கேப்டன் பதவிக்கு வந்த பிறகு பீல்டிங்க்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார். அதில் சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். பவுண்டரி லைனில் நின்று கேட்ச்களை பிடிப்பதில் சிறப்பாக விளங்கினார்கள். இதற்கு பிறகு விராட் கோலியும் சிறப்பாக பீல்டிங் செய்தார்.

இதனால் இந்தியாவில் விராட் கோலி, ரவிந்திர ஜடேஜா, யுவராஜ்சிங், சுரேஷ் ரெய்னா இவர் நால்வரும் சிறந்த

பீல்டிங் செய்வர்கள்.

இந்த நான்கு பேரில் பெஸ்ட் பீல்டர் யார் என ஆஸ்திரேலியா முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக்கிடம் ரசிகர்கள் ட்விட்டரில் கேட்ட போது: அவர்கள் 4 பேரும் சிறப்பான பில்டர்கள். இவர்கள் மைதானத்தில் இருந்தால் பந்தை பிடிப்பது மிக சிறப்பாக இருக்கும். இவர்களில் மிக பெஸ்ட் பில்டர் ஜடேஜாவை தேர்வு செய்வேன் என்றார். ஜடேஜா தற்போது சிறப்பாக கேட்சிங் மற்றும் பில்டிங் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News