'பிற நாடுகளையும் வழிநடத்த தயாரான நிலையில் இந்தியா உள்ளது' : ககன்யான் முதல் சோதனை வெற்றி - பிரதமர் மோடி பாராட்டு!
ககன்யான் ராக்கெட் வெற்றிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
By : Karthiga
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் சோதனை ராக்கெட் ஏவுதல் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட சமூக வலைதள பதிவில் "இந்த ஏவுதல் வெற்றி மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டமான ககன்யானை நனவாக்குவதில் மேலும் ஒரு அடி முன்னே நம்மை கொண்டு சென்றுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.
மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை ராஜாங்க மந்திரி டாக்டர் ஜிதேந்திரசிங் வெளியிட்ட பதிவில் இந்த சோதனை ஏவுதல் ககன்யான் திட்டத்தில் கடைசி பகுதியில் முதல் கட்டமாகும். இதைத்தொடர்ந்து மேலும் பல சோதனை ஏவுதல்கள் மேற்கொள்ளப்படும். மிக முக்கியமான விண்வெளி குழு பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வழிமுறை தற்போது சோதிக்கப்பட்டுள்ளது . இந்தியா இன்று பிற நாடுகளையும் வழிநடத்த தயாரான நிலையில் உள்ளது என்று கூறியுள்ளார்.
SOURCE :DAILY THANTHI