Kathir News
Begin typing your search above and press return to search.

மலேசியாவில் ஏற்பட்ட முட்டை கட்டுப்பாடு: நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி!

மலேசியாவில் ஏற்பட்ட முட்டை தட்டுப்பாடு காரணமாக நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது.

மலேசியாவில் ஏற்பட்ட முட்டை கட்டுப்பாடு: நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  20 Dec 2022 2:52 AM GMT

மலேசியாவில் தற்பொழுது நிலவி வரும் முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க உதவுமாறு இந்தியாவிடம் மலேசிய இந்திய தூதரகத்திற்கு சார்பில் உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் கோரிக்கை விடுத்து இருந்தார். இந்திய துணை தூதரின் கோரிக்கையை ஏற்று, திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. இதன் அடிப்படையில் இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்ய மலேசியா அரசு தயாராக இருப்பதாக கொழும்பூரில் உள்ள இந்திய துணை தூதர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பு ஒன்றை அனுப்பி இருந்தார்.


இதன் காரணமாக நாமக்கல்லில் இருந்து முதல் முறையாக மலேசியாவிற்கு முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய மண்டல தலைவர் ஷோபனா குமார் தன்னுடைய அறிக்கையில் இது பற்றி குறிப்பிட்டு இருக்கிறார்.


திருச்சி விமான நிலையத்திலிருந்து சுமார் 90 ஆயிரம் மூட்டை விமானத்தில் ஏற்றப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். முட்டைகள் சோதனைக்கு பிறகு அங்கீகரிக்கப்படும் என்றும், அதன் பின்னர் நாமக்கல்லில் இருந்து முட்டைகள் ஏற்றுமதி செய்ய தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

Input & Image courtesy: PIB

Next Story
கதிர் தொகுப்பு
Trending News