Kathir News
Begin typing your search above and press return to search.

இங்கிலாந்தில் நடந்து வரும் வினாடி வினா போட்டியின் இறுதி போட்டிக்கு தேர்வான இந்தியர்!

இங்கிலாந்தில் நடைபெறும் வினாடி வினா போட்டியின் இறுதி தகுதி சுற்றுக்கு இந்தியர் தேர்வாகியுள்ளார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் வினாடி வினா போட்டியின் இறுதி போட்டிக்கு தேர்வான இந்தியர்!

KarthigaBy : Karthiga

  |  8 April 2024 5:31 AM GMT

இங்கிலாந்தின் பிரபல பிபிசி தொலைக்காட்சி யுனிவர்சிட்டி சேலஞ் என்ற பெயரில் வினாடி வினா என்ற போட்டியை நடத்தி வருகிறது. அந்த நாட்டின் மிகவும் கடினமான வினாடி வினா போட்டியாக கருதப்படும் இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. இந்த நிலையில் இந்த வினாடி வினா போட்டி அண்மையில் தொடங்கிய நிலையில் அதன் அரை இறுதி சுற்று கடந்த வாரம் நடந்தது .

இந்த போட்டியில் லண்டன் இம்பீரியல் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்கள் குழு பங்கேற்றது. அந்த குழுவில் கொல்கத்தாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரியான சௌரஜித் தேப்நாத் இடம் பெற்றார். போட்டியில் முன்வைக்கப்பட்ட பல கடினமான கேள்விகளுக்கு சௌரஜித் தேப்நாத் திறம்பட பதில் அளித்தார். இதன் மூலம் அவரது குழு இறுதி சுற்றுக்கு தேர்வானது .லண்டனில் இன்று இறுதி போட்டி நடைபெறுகிறது.


SOURCE :Dinaseithi

Next Story
கதிர் தொகுப்பு
Trending News