சீனாவின் பட்டுப்பாதையை முடக்க இந்தியாவின் புதிய நடவடிக்கை!
சீனாவின் பட்டுப்பாதையை முடக்குவதற்கு இந்தியா அதிரடியாக புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
By : Karthiga
உலகம் முழுவதும் தனது வர்த்தகத்தையும் ஆதிக்த்தையும் வலுப்படுத்த சீன அதிபர் ஜின் பிங் 'பொருளாதார பட்டுப்பாதை'திட்டத்தை அறிவித்தார் . இது உலகம் முழுவதும் பல நாடுகள் வழியாக சாலை துறைமுகங்கள் நீர்வழிப்பாதைகள் என உள்கட்டமைப்பு மேம்படுத்தி சீனாவுக்கான வர்த்தக பாதையை விரிவு படுத்துவதாகும். 2013ல் 30 லட்சம் கோடிகள் தொடங்கப்பட்ட இந்த திட்டம் இப்போது பாதைகள் மற்றும் சாலைகள் என பெயர் மாற்றத்துடன் பல மடங்கு மதிப்பு உயர்த்தப்பட்டுளது . இந்த திட்டத்தின் 150 நாடுகள் சீனாவுடன் இணைந்துள்ளன .
இந்த திட்டத்தின் கீழ் தான் சீனாவையும் பாகிஸ்தானையும் இணைக்கும் சாலையாக்கிரமிப்பு பாகிஸ்தான் வழியாக செல்கிறது . மேலும் இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான், வங்கதேசம் என பல நாடுகளில் ஏழு துறைமுகங்களை சீனா அமைக்கிறது. இதற்கு இந்தியா, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ஜி-20 மாநாட்டில் சீனாவுக்கு போட்டியாக புதிய வர்த்தக பாதை அறிவிப்பு வெளியாகி உள்ளது . இந்த பாதை இந்தியா மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வர்த்தக பாதையாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் வழியாக சாலை ரயில் மற்றும் நீர்வளத்தட பாதைகள் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இடையே அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துடன் அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய அரபு எமிட்ஸ் மற்றும் பிற நாடுகள், ரயில்வே, துறைமுகங்கள் மின்சார நெட்வொர்க்குகள் மற்றும் ஹைட்ரஜன் குழாய்களை இணைக்கும் யோசனைக்கு சம்மதித்துள்ளன. எனவே இது சீனாவின் ஒரே பாதை ஒரே சாலை திட்டத்திற்கு சவால் கொடுப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SOURCE: DINAKARAN