ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் - நாடு முழுவதும் 57 கல்வி நிறுவனங்களில் அறிமுகம்
ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் நாடு முழுவதும் 57 கல்வி நிறுவனங்களில் தொடங்கியுள்ளது.
By : Karthiga
2020 ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் முதன்மை திட்டமான நான்காண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டம் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. இதன்படி பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.காம் படிப்புகளுடன் பி.எட் பட்டம் வழங்கப்படும். இந்த திட்டத்தை ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் தற்போது நாடு முழுவதும் 57 ஆசிரியர் கல்வி நிறுவனங்களில் தொடங்கியுள்ளது .
இதை மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இந்த திட்டம் புகழ்பெற்ற மத்திய மாநில அரசு பல்கலைக்கழகங்கள், மற்றும் நிறுவனங்களில் முன்னோடி முறையில் வகுக்கப்படுகிறது. இரண்டாம் நிலைக்குப் பிறகு விருப்பப்படி கற்பித்தலை தொழிலாக தேர்ந்தெடுக்கும் அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தில் பயிலலாம். இந்தப் பாடமுறையில் மாணவர்களுக்கு ஒரு ஆண்டு மிச்சப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.