"பா.ஜ.க-வை விரட்டுவோம் என சொன்ன தி.மு.க, தற்போது எங்களை பார்த்து ஈ அடிச்சான் காப்பி?" - விளாசும் SG சூர்யா!
"பா.ஜ.க-வை விரட்டுவோம் என சொன்ன தி.மு.க, தற்போது எங்களை பார்த்து ஈ அடிச்சான் காப்பி?" - விளாசும் SG சூர்யா!
By : Kathir Webdesk
பா.ஜ.க-வை தமிழகத்தில் காலை ஊன்ற விட மாட்டோம், பா.ஜ.க-வை தமிழகத்தில் இருந்து விரட்டி அடிப்போம். ஆகியவை, தி.மு.க மற்றும் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சொல்லும் வசனங்கள்.
ஆனால், அதற்கு நேர்மாராக தமிழக பா.ஜ.க-வை தி.மு.க பின்பற்ற்றுவதாக தமிழக பா.ஜ.க செய்தித் தொடர்பாளரும், இளைஞரணி மாநிலத் துணைத்தலைவருமான SG சூர்யா 'பகீர்' குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
தி.மு.க ட்விட்டர் பக்கத்தில், "இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்" என்ற திருக்குறளை மேற்க்கோள் காட்டி ஒரு பதிவு நேற்று செய்யப்பட்டது.
அந்த பதிவு:
இதற்கு பதிலளித்த SG சூர்யா, தமிழக பா.ஜ.க ட்விட்டர் பக்கம் மாதக்கணக்கில் திருக்குறள் மேற்கோள் காட்டப்பட்டு அன்றாட அரசியல் பதிவுகள் பதியப்பட்டு வருகின்றன. அதை தற்போது "ஈ அடிச்சான் காப்பி" போல பின்பற்ற தொடங்கியுள்ளது தி.மு.க. எப்படியோ திருக்குறள் மக்களுக்கு போய் சேர்வது நல்லதே என்று பதிவிட்டு இருந்தார்.
தமிழக பா.ஜ.க-வை, தி.மு.க பின்பற்றுகிறதா என்ற கேள்வி எழுகிறது.