மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தது ஜாக்பாட். மீண்டும் அகவிலைப்படி உயர்வு பற்றி மத்திய அரசு அறிவித்துள்ளது.
By : Karthiga
தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியானது சமீபத்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CPI-IW) அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் பணியகத்தால் வெளியிடப்படுகிறது. இந்த அகவிலைப்படி ஆண்டுக்கு இரு முறை வழங்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு அகவிலைப்படி உயர்வு 3% வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வழங்கினால் ஊழியர்கள் 45 சதவீதம் பலனை பெறுவார்கள். மேலும் இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜூலை 1, 2023 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வரும்.
மேலும் ஊழியர்கள் 4% அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து இருக்கும் நிலையில், அவ்வாறு வழங்கப்படாமல் 3 சதவீத புள்ளிகளுக்கு சற்று அதிகமாக இருக்கும் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த புதிய உயர்வால் ஒரு கோடிக்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், ஒடிசா, கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் தங்களுடைய மாநில அரசு ஊழியர்களுக்கு சமீபத்தில் அகவிலைப்படியை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது