Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை வந்தும் ஜப்பான் துணை முதல்வரை சந்திக்காததால் சீனாவின் மேல் ஜப்பானுக்கு கடும் அதிருப்தி!

சென்னை வந்தும் ஜப்பான் துணை முதல்வரை சந்திக்காததால் சீனாவின் மேல் ஜப்பானுக்கு கடும் அதிருப்தி!

சென்னை வந்தும் ஜப்பான் துணை முதல்வரை சந்திக்காததால் சீனாவின் மேல் ஜப்பானுக்கு கடும் அதிருப்தி!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Oct 2019 2:25 PM GMT


நையாண்டி செய்திகளுக்காக டோக்கியோவிலிருந்து பீரஞ்சன்.


சென்னை அருகே நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார் சீனாவின் அதிபர் ஷி ஜிங்பிங். இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது. இந்திய - சீன உறவுகள் மேம்பட நடந்த இந்த மாநாட்டினால் ஜப்பான் கொதிப்படைந்துள்ளது.


இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் சீனாவை கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் "சென்னையில் நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட ஷி ஜிங்பிங், அதே நகரில் வசிக்கும் எங்கள் நாட்டின் துணை முதல்வரை சந்திக்காமல் திரும்பியது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை அறிந்த பிரதமர் ஷின்சோ அபே தனது கண்டனத்தை பதிவு செய்கிறார். மேலும், கோபாலபுரத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு ஜப்பான் துணை முதல்வரை நலம் விசாரித்தார்." என குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜப்பானில் குடியிருக்கும் ஜப்பான் துணை முதல்வரின் விசுவாசி மற்றும் உடன்பிறப்பான து ரைம் ருகன் நம்மிடம் பேசுகையில், "இது மிகவும் மோசமான செயல். மாமல்லப்புரத்தில் இல்லாத இராமரின் இதிகாச நாடகம் பார்க்க நேரம் இருக்கிறது ஷி ஜின்பிங்கிற்கு, ஆனால், துணை நாடான ஜப்பானுடைய துணை முதல்வரை சந்திக்க நேரம் இல்லையோ?" மேலும் கொதிப்படைந்த அவர், "சீனாவாவது, சூணாவாவது.." என்றும் கத்தினார்.


சீனாவின் மேல் ஜப்பான் கடுங்கோபம் கொண்டுள்ளதால், அங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ தென் கொரியா முயற்சிகள் எடுத்த வண்ணம் உள்ளன.


கடைசியாக, கோபாலபுரத்தில் உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கையில், சீன அதிபரை வரவேற்க அவரின் பெயரை சொல்ல வேண்டி வருமே என்ற கவலையில் இருந்த ஜப்பான் துணை முதல்வருக்கு, இந்த சந்திப்பு நிகழாதது பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக தெரிகிறது.


குறிப்பு: இது முழுக்க கற்பனை செய்தியாகும். வாசகர்கள் இதனை நிஜ செய்தி என்று நினைத்து குழம்பக்கூடாது. எனினும் தமிழ் செய்தி ஊடங்கங்கள் போல் அல்லாமல், நாங்கள் இதனை குறிப்பினில் சொல்கிறோம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News