Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க இளைஞரணி செயலாளரின் காம வெறியால் ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் கொலை - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் #JusticeForSasikala

தி.மு.க இளைஞரணி செயலாளரின் காம வெறியால் ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் கொலை - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் #JusticeForSasikala

தி.மு.க இளைஞரணி செயலாளரின் காம வெறியால் ஏற்பட்ட பாலியல் தொல்லை மற்றும் கொலை - சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகும் #JusticeForSasikala

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 July 2020 2:51 AM GMT

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே நைனார் குப்பத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதுடன் கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட தி.மு.க இளைஞரணி செயலாளரார் தேவேந்திரன்னை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்ற செய்தி நேற்று வெளியானது.

நைனார் குளத்தை சேர்ந்த சசிகலா என்ற இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார், ஊரடங்கு என்பதால் வேலைக்கு செல்லவில்லை இதற்கிடையில் தேவேந்திரன் தனது அண்ணன் புருஷோத்தமனுடன் சேர்ந்து ஆபாசமாக படம் எடுத்து தன்னுடன் ஆசைக்கு இணங்குமாறு திமுக தேவேந்திரன் மற்றும் அவரது அண்ணன் தொல்லை குடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த சசிகலா வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிடுவேன் என தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க தேவேந்திரன் மற்றும் அவரது அண்ணன் இருவரும் சசிகலாவை அடித்து கொலை செய்ததுடன் தூக்கில் மாட்டி தற்கொலை செய்துக்கொண்டார் எனவும் நாடகம் ஆடியுள்ளனர்.

சசிகலாவுக்கு நியாயம் கேட்டு #JusticeForSasikala என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் தொடர்ந்து நேற்று முதல் பதியப்பட்டு வருகிறது.

பாடகர் சின்மயி ட்வீட்:

அரசியல் விமர்சகர் சுமந்த் ராமன் ட்வீட்:

Put Chutney ராஜ்மோகன் ட்வீட்:

இவ்வாறு தொடர்ந்து சசிகலாவுக்கு நியாயம் கேட்டு வருகின்றனர். இது குறித்து தி.மு.க-வில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராதது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News