Kathir News
Begin typing your search above and press return to search.

அவலம் ! அவலம் ! காபூல் விமான நிலையத்தில் 5 பேர் பலி !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்துள்ளனர் .

அவலம் !  அவலம் !  காபூல் விமான நிலையத்தில் 5 பேர் பலி !

G PradeepBy : G Pradeep

  |  16 Aug 2021 9:17 AM GMT

காபூல் நகரில் இருந்து வெளியேற விமான நிலையத்தில் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்த நிலையில், ஐந்து பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை பிடித்துள்ளனர். இதனால் என்ன நடக்குமோ? என அஞ்சிய மக்கள் காபூல் நகரில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளனர். அவர்கள் வெளியேற ஒரே வழி விமானம் மட்டுமே என்பதால், விமான நிலையத்திற்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர்.

இதனால் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கூட்டத்தை கட்டுப்படுத்த அமெரிக்க வீரர்கள் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் மக்கள் சிதறடித்து ஓடினர். இதற்கிடையே விமான நிலையத்தில் இருந்து ஐந்து பேர் உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டதாக அங்கிருந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனரா? அல்லது கூட்ட நெரிசலில் உயிரிழந்தனரா? என்பது குறித்த முழு தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News