Kathir News
Begin typing your search above and press return to search.

பேரனின் கண் முன்னே தீவிரவாதிகளால் கொல்லப்பட தாத்தா - நெஞ்சை கரைக்கும் சம்பவம்.! #Kashmir #TerrorAttack

பேரனின் கண் முன்னே தீவிரவாதிகளால் கொல்லப்பட தாத்தா - நெஞ்சை கரைக்கும் சம்பவம்.! #Kashmir #TerrorAttack

பேரனின் கண் முன்னே தீவிரவாதிகளால் கொல்லப்பட தாத்தா - நெஞ்சை கரைக்கும் சம்பவம்.! #Kashmir #TerrorAttack

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 July 2020 9:00 AM GMT

காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் சோபோர் பகுதியில் நேற்று பாதுகாப்புப் படையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, அந்தப் பகுதியில் பேரனுடன் நடந்து சென்றுக் கொண்டிருந்த 90 வயது முதியவர் மீது இரண்டு குண்டுகள் பாய்ந்தன. இதில், முதியவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். திடீரென்று தாத்தா ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தைப் பார்த்த சிறுவன் உடலருகே கதறியழுதான்.

அப்போது, அங்கு தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த பாதுகாப்புப் படை வீரர் சிறுவனை தன்னருகில் அழைத்து வைத்துக் கொண்டார். இதனால், சிறுவன் உயிர் பிழைத்தான். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் அதிகாரிகள் சிறுவனை மீட்டு, தாக்குதல் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்திலிருந்து கொண்டு சென்றனர் . அழுதபடியே இருந்த சிறுவனை போலீஸ் அதிகாரிகள் ஆசுவாசப்படுத்தினர்.

மேலும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப் படை வீரர் ஒருவர் பலியாக மேலும் மூன்று வீரர்கள் காயமும் அடைந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News