Kathir News
Begin typing your search above and press return to search.

கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைவு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

மத்திய அரசு கியாஸ் சிலிண்டரின் விலையை ரூபாய் 200 அதிரடியாக குறைத்துள்ளது. அதற்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

கியாஸ் சிலிண்டர் விலை ரூபாய் 200 குறைவு - பிரதமர் மோடிக்கு அண்ணாமலை நன்றி

KarthigaBy : Karthiga

  |  30 Aug 2023 11:15 AM GMT

நாடு முழுவதும் உள்ள அனைத்து சமையல் கியாஸ் பயனாளர்களுக்கும் ரூபாய் 200 கூடுதலாக மானியம் அறிவித்து சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் ரூபாய் 200 குறைத்து அறிவித்துள்ள நமது நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். உஜ்வாலா சமையல் கியாஸ் திட்டத்தின் கீழ் மேலும் 75 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் கியாஸ் இணைப்பு வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.


கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உஜ்வாலா பயனாளிகளுக்கு ₹200 மானியம் அறிவித்திருந்தார். இந்த ஆண்டு மார்ச் மாதம் மேலும் ஓர் ஆண்டுக்கு 200 மானியம் நீட்டிக்கப்பட்டது . இன்றைய அறிவிப்பின் மூலம் நாடு முழுவதும் உள்ள 9.6 கோடி உஜ்வாலா பயனாளிகள் ஒரு சிலிண்டருக்கு ரூபாய் நானூறு மானியமாக பெறுவார்கள். இந்த நேரத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 100 மானியமாக வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி எண் 53 இல் கூறிய திமுக ஆட்சிக்கு வந்து 27 மாதங்கள் கடந்தும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருப்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இவ்வாறு அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News