Kathir News
Begin typing your search above and press return to search.

கூண்டோடு தூக்கப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் - ஒரே நேரத்தில் 27 காவலர்கள் நியமனம் செய்து உத்தரவு!

கூண்டோடு தூக்கப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் - ஒரே நேரத்தில் 27 காவலர்கள் நியமனம் செய்து உத்தரவு!

கூண்டோடு தூக்கப்பட்ட சாத்தான்குளம் காவல்நிலைய காவலர்கள் - ஒரே நேரத்தில் 27 காவலர்கள் நியமனம் செய்து உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Jun 2020 1:40 PM GMT

சாத்தான்குளத்தைச் சோந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோா் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக, சாத்தான்குளம் காவல்நிலைய காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதிய ஆய்வாளராக பொனாா்ட் சேவியா் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்து காவலர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர்கள் அனைவரையும் பணியிட மாற்றம் செய்து, 27 காவலர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு உதவி ஆய்வாளர், புதிய தலைமைக் காவலர்கள் உள்பட 27 பேரை நியமித்து காவல்துறை எஸ்.பி. உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதிதாக பொறுப்பேற்று இருக்கும் பொனாா்ட் சேவியா், இதற்கு முன்னர் நாகா்கோவில் வடசேரி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.

அதற்கு முன்னதாக தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலையத்தில் ஆய்வாளராகவும், தூத்துக்குடி தனிப் பிரிவு ஆய்வாளராகவும் பணிபுரிந்துள்ளாா்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News