Kathir News
Begin typing your search above and press return to search.

கும்பகோணத்தில் சரஸ்வதி, லட்சுமி சுவாமி சிலைகளை விற்க முயன்றவர் கைது!

கும்பகோணத்தில் சரஸ்வதி மற்றும் லட்சுமி சிலைகளை அவரிடமிருந்து பறிமுதல் செய்து போலீஸார்.

கும்பகோணத்தில் சரஸ்வதி, லட்சுமி சுவாமி சிலைகளை விற்க முயன்றவர் கைது!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  2 July 2022 1:27 AM GMT

சாமி சிலைகளை கடத்தி, அவற்றை விற்க முயல்வது தற்போது பிரபலமான வியாபாரமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கும்பகோணத்தை சேர்ந்த இரண்டு நபர்கள் அந்த வகையில் தற்போது கும்பகோணத்தை சேர்ந்த இரண்டு வியாபாரிகள் சுவாமி சிலையை கடத்தி விற்க முயன்று உள்ளார்கள். மேலும் இவர்களை பிடிப்பதற்காக போலீசார் தனி ஒரு வேடத்தையும் போட்டுள்ளார்கள். சாமி சிலைகளை இத்தகையை வியாபாரிகளிடமிருந்து வாங்குவதாக ஆள்மாறாட்டத்தில் போய் போலீசார் இவர்களை கைது செய்து உள்ளார்கள்.


மேலும் வைத்திருந்த மொத்த சிலைகளின் மதிப்பு சுமார் இரண்டு லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ரஞ்சித் மற்றும் உதயகுமார் என்ற இரண்டு வியாபாரிகள் தான் இத்தகைய சாமி சிலைகளை சட்ட புறம்பாக விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் வைத்திருந்த சுவாமி சிலைகள் புராதனமான கோவில் களில் இருந்து திருடப்பட்ட தாகவும் நம்பப்படுகிறது இதனை தொடர்ந்து போலீசார் இவர்களை விசாரித்து வருகிறார்கள்.


இவர்கள் பற்றிய தகவல்களை கிடைத்தவுடன் போலீசார் இத்தகையோர் மறைமுகமாக சிலைகளை வாங்குவது போல் சென்று அவர்களை கைது செய்து உள்ளார்கள். மேலும் இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிலைகளை வாங்குவதாக அழைத்து போலீசார் மடக்கி பிடித்து உள்ளார்கள் இவர்களிடம் இருந்து 4 கிலோ சரஸ்வதி சிலை மற்றும் 2 கிலோ சிலைகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.

Input & Image courtesy: Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News