Kathir News
Begin typing your search above and press return to search.

இருண்ட வானில் ஒளிவிளக்கு - இந்திய பொருளாதாரம் பற்றி ஐ.எம்.எப் தலைவர் பாராட்டு

இருண்ட வானில் நம்பிக்கை ஒளி விளக்கு என இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஐ.எம்.எப் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இருண்ட வானில் ஒளிவிளக்கு - இந்திய பொருளாதாரம் பற்றி ஐ.எம்.எப் தலைவர் பாராட்டு

Mohan RajBy : Mohan Raj

  |  14 Oct 2022 6:19 AM GMT

இருண்ட வானில் நம்பிக்கை ஒளி விளக்கு என இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பற்றி ஐ.எம்.எப் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியமான ஐ.எம்.எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜியவா இந்திய பொருளாதார நிலை பற்றி பெருமையாக கூறியுள்ளார். ஜி 20 நாடுகள் கூட்டமைப்புக்கு டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஓராண்டுக்கு பிறகு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது.

இந்தியா தலைமை ஏற்றதும் ஜி 20 நாடுகளுடன் நாடுகளுடன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 200 கூட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டாலினா ஜார்ஜியவா கடினமான காலங்களில் கூட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி சீராக உள்ளதாகவும் இருண்ட வானத்தில் ஒளிக்கீற்றாக இருப்பதாகவும் கூறுவது மிகவும் பொருத்தமானது என இந்திய பொருளாதாரம் பற்றி பெருமையுடன் குறிப்பிட்டார்.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News