Kathir News
Begin typing your search above and press return to search.

முருகப்பெருமானின் மூன்று வாகனங்கள்!

முருகப்பெருமானுக்கு மயில் என்ற ஒரே வாகனம் என்று தான் அனைவரும் அறிந்திருப்போம். மூன்று வாகனங்களை பற்றி காண்போம்.

முருகப்பெருமானின் மூன்று வாகனங்கள்!

KarthigaBy : Karthiga

  |  19 April 2024 3:31 AM GMT

முருகனின் வாகனம் என்றாலே மயில் தான் அனைவர் எண்ணத்திலும் வரும். ஆனால் முருகப்பெருமானுக்கு மூன்று வாகனங்கள் உண்டு .அவை மயில், யானை ,ஆட்டுக்கிடா ஆகும். தேவர்களுக்கு அருள் செய்த தலைவனாக இருப்பதாலும் ராஜ கம்பீரம் கொண்டவர் என்பதாலும், அவருக்கு யானை வாகனம் பொருத்தமாக வழங்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் நாரதர் வேள்வி ஒன்றை செய்தார். அந்த வேள்வியில் மந்திரங்களை தவறாக உச்சரித்தார். அதன் விளைவாக யாகத்தில் ஒரு பெரிய ஆட்டுக்கிடா தோன்றியது.

யாராலும் அடக்க முடியாத வலிமையுடன் அது விண்ணுலகத்தையும் மண்ணுலகத்தையும் அச்சுறுத்தியது. அச்சம் கொண்ட தேவர்கள் முருகனிடம் சென்று முறையிட்டனர். முருகப்பெருமான் வீரவாகு தேவரை அனுப்பி அந்த ஆட்டுக்கிடாவைப் பிடித்து அடக்க செய்து தனது வாகனமாக ஆக்கிக் கொண்டார். சூரபத்மனுடன் முருகப் பெருமான் போர் செய்தார். ஒவ்வொரு முறையும் ஒரு வடிவம் கொண்டு போரிட்டான் சூரபத்மன். ஆனாலும் அவன் தோல்வியே தழுவினான்.

ஒருமுறை சக்கரவாக பறவையாக மாறி போரிட்டான். அப்போது இந்திரன் மயிலாக மாறி முருகனை தாங்கினான்.பின்னர் சூரியன் மாமரமாகி கடல் நடுவே மறைந்து நின்றான். அந்த மரத்தை வேல் கொண்டு இரண்டு கூறாக முருகன் பிளந்தார் .அதில் ஒன்று மயிலாகவும் மற்றொன்று சேவலாகவும் மாறியது. மயில் ஆணவம் என்றும் யானை கன்மம் என்றும் ஆடு மாயை என்றும் மும்மலங்கலை அடக்கி அருள் பவனே முருகன் என்பதே இதன் சான்று.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News