பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் - மதுரை ராணுவ வீரர் வீர மரணம்!
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் இப்போது மதுரை ராணுவ வீரர் வீரமரணம்.
![பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் - மதுரை ராணுவ வீரர் வீர மரணம்! பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் - மதுரை ராணுவ வீரர் வீர மரணம்!](https://kathir.news/h-upload/2022/08/12/1402154-ccexpress202208121404430547740927942382.webp)
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் பயங்கரவாதிகள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலை எதிர்த்துப் போரிட்ட நம் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒருவர்தான் மதுரை மாவட்டம் புது பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் என்பவர். இவருடைய இந்த வீரமரணம் கிராமத்தில் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
நாட்டில் தற்போது 72 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒருபுறம் தீவிரப்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கும் ஒரு சூழ்நிலையில்தான் இந்திய நிலையில் எல்லைக்குள் பயங்கரவாத தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்து இருக்கும் ஒரு செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அது ஒரு மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் ஆவார். இவருடைய குடும்பம் முழுவதும் தற்போது பெரும் சோகத்தை சந்தித்து உள்ளார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசின் சார்பில் தலா 20 லட்சம் நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ளது சிறு ஆறுதலை அளித்துள்ளது. மேலும் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி சமர்ப்பிக்கின்றேன் என்று தமிழக முதல்வர் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
Input & Image courtesy: Indian Express