Kathir News
Begin typing your search above and press return to search.

கஞ்சாவை ஒழிக்க போராடும் தி.மு.க கவுன்சிலர் : அவரின் மகனே கஞ்சா விற்று கைதான கொடுமை - தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றியது அம்பலம்!

கஞ்சாவை ஒழிக்க போராடும் தி.மு.க கவுன்சிலர் : அவரின் மகனே கஞ்சா விற்று கைதான கொடுமை - தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றியது அம்பலம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 April 2020 5:02 PM IST

தாய் கஞ்சாவுக்கு எதிராக போராடி வரும் நிலையில், மதுரை மாவட்டத்தில் தி.மு.க., இளைஞரணி நிர்வாகியான பிரவீன் கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட சமயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை சூடுபிடித்து வருகிறது. இதனை ஒழிக்க கோரி அந்த பகுதி திமுக ஒன்றிய கவுன்சிலரான செல்வி ஆரோக்கியமேரி சில வாரங்களுக்கு முன் சமயநல்லூர் காவல்நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்.

இந்நிலையில் நேற்று இளைஞர் அதிகம் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து சென்ற போது, ஆரோக்கியமேரியின் மகன் பிரவீன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஏற்கனவே அவர் பல மோசடி வேலைகளில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் பணியாற்றிய போது ஏடிஎம் மையத்திற்கு வந்தவர்களிடம் பணம் எடுத்து தருவதாக கூறி மாேசடி செய்து அவர்களின் பணத்தை அபகரித்த வழக்கில் சஸ்பென்ட் செய்யப்பட்டவர்.

மேலும், பல குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டதால் அது தொடர்பான விசாரணை நடந்து வரும் வேளையில், தற்போது சமயநல்லூர் தி.மு.க., இளைஞரணி நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். அவருக்கு எங்கிருந்து கஞ்சா சப்ளை நடைபெறுகிறது என்றும், அதன் ஏஜெண்ட் யார் என்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சாவை ஒழிக்க தி.மு.க., பெண் கவுன்சிலர் போராட்டம் நடத்தியதும், அவரது மகனே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News