தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுதினம் முதல் கோர்ட்டுகளில் முகக்கவசம் கட்டாயம் - ஐகோர்ட் தலைமை பதிவாளர் அறிவிப்பு !
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கோர்ட்டுகளில் நாளை மறுதினம் முதல் முக கவசம் அணிந்து வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
By : Karthiga
நாட்டின் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று தற்போது மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. அமை கிரானின் துணை வைரஸ் ஆன எக்ஸ் பி.பி 1.16 தாக்குதல் அதிகரித்து இருப்பதே இந்த தொற்று பரவல் அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு சென்னை ஐகோர்ட் மற்றும் ஹைகோர்ட் மதுரை கிளையில் நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று ஹைகோர்ட் அறிவித்தது .
இந்த நடைமுறை கடந்த பத்தாம் தேதி முதல் அமலுக்கு வந்தது .தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்து விட்டது . இதையடுத்து சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளிலும் நாளை மறுதின முதல் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிந்து வர வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து ஐகோர்ட்டு தலைமை பதிப்பாளர் பி. தனபால் அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கோர்ட் அதிகாரிகள் ஊழியர்கள் வக்கீல்கள் பொதுமக்கள் என்று கூறி வளாகத்துக்குள் வரும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.கோர்ட்டு அறைகள் , வக்கீல் அறைகள் மற்றும் கோர்ட் வளாகம் முழுவதும் கிருமிி நாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.