Kathir News
Begin typing your search above and press return to search.

போதையில் காவல்துறை அதிகாரியை வெளுத்த மயிலாடுதுறை இளைஞர்கள் - சி.சி.டி.வி காட்டி கொடுத்தது

மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினரை தாக்கிய போதை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதையில் காவல்துறை அதிகாரியை வெளுத்த மயிலாடுதுறை இளைஞர்கள் - சி.சி.டி.வி காட்டி கொடுத்தது

Mohan RajBy : Mohan Raj

  |  26 Oct 2022 2:44 PM GMT

மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே காவல்துறையினரை தாக்கிய போதை இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறையில் பணியில் இருந்து ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரியை தாக்கி அவர்கள் வைத்திருந்த வாக்கி டாக்கியை உடைத்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

அவர்கள் போலீஸ் அதிகாரியை தாக்கிய காட்சிகளை சி.சி.டி.வி உதவி கொண்டு ஆராய்ந்து பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை ஜங்ஷன் ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலராக பணியாற்றும் பக்கிரிசாமிக்கும் தீபாவளி அன்று இரவு ஒன்பதாவது பிளாட்பாரத்தில் நின்ற சத்தம் போட்டுக் கொண்டிருந்த நான்கு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அவர்கள் பத்திரிசாமியின் வாக்கி டாக்கியை பிடுங்கி உடைத்தது கொலை மிரட்டல் விடுத்தபடி தப்பிச் சென்றனர்.

இது தொடர்பாக புகார் பேரில் அங்கு சி.சி.டி.வி உதவியுடன் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News