தூது அஞ்சல் மூலம் பறந்து வந்த உயிர்காக்கும் சுவாசகருவிகள் - சபாஷ் !
தூது அஞ்சல் மூலம் பறந்து வந்த உயிர்காக்கும் சுவாசகருவிகள் - சபாஷ் !
By : Kathir Webdesk
கொரோனா நோய் தொற்று தீவிரமடைத்து சுவாச உறுப்புகள் பதிபடைந்து நோயாளிகளின் உயிர் இழப்பு அதிகரிப்பதை தடுத்து நோயாளிகளை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நவீன மருத்துவ கருவிகளை வாங்கி வருகின்றனர்
தமிழக அரசின் சுகாதார துறையின் சார்பில் உயிர் காக்கும் சுவாச கருவிகளை வெளிநாடுகளில் இருந்து வாங்கி வருகின்றனர்
தமிழக அரசு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா,சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து உயிர்காக்கும் சுவாச கருவிகளை தூது அஞ்சல் மூலம் வரவழைத்துதுள்ளனர்
சர்வதேச அளவில் தூது அஞ்சல் நிறுவங்கள் சரக்கு விமானங்களை இயக்கி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளனர்
சர்வதேச தூது அஞ்சல் மூலம் உயிர்காக்கும் சுவாச கருவிகள், முதற்தர முக கவசங்கள், இதயஓட்டத்தை அறியும் கருவிகள்,உடல் வெப்பத்தை அறிய உதவும்கையடக்க வெப்பமானிகள், சாதாரன முககவசங்கள் என 107 பெட்டிகளை பிரித்து ஆய்வு செய்த சுங்க துறை அதிகாரிகள் உடனடியாக தமிழக சுகாதார துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்