Begin typing your search above and press return to search.
விருதுநகரில் மெகா ஜவுளி பூங்கா ஜவுளி சந்தையில் தமிழகம் அதிக பங்கை பெறும் - பிரதமர் நரேந்திர மோடி!
விருதுநகரில் தொடங்க உள்ள மெகா ஜவுளி பூங்காவால் ஜவுளி தொழில்நுட்ப சந்தையில் தமிழகம் அதிக பங்கை பெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார்.
By : Karthiga
தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் மத்திய மாநில அரசுகள் சார்பில் பி.எம் மித்ரா மெகா ஜவுளி பூங்கா அமைக்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
முன்னேற விழையும் மாவட்டமான விருதுநகர் பிரதமரின் மித்ரா மெகா ஜவுளி பூங்காவின் உறைவிடமாக இருக்கும் . இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுடன் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு பயன் அளிக்கும் . தமிழ்நாட்டு ஜவுளி துறையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.
மெகா ஜவுளி பூங்கா உலக அளவில் செயற்கை இழை மற்றும் ஜவுளி தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற இது உதவும் .இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story