Kathir News
Begin typing your search above and press return to search.

ரூபாய் 39,125 கோடி மதிப்புள்ள அருமையான ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பாதுகாப்பு அமைச்சகம்!

ரூபாய் 39,125.39 கோடி மதிப்புள்ள 5 ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.

ரூபாய் 39,125 கோடி மதிப்புள்ள அருமையான ஐந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட பாதுகாப்பு அமைச்சகம்!

KarthigaBy : Karthiga

  |  4 March 2024 9:43 AM GMT

பாதுகாப்புத் துறையில் தற்சார்பை அடைவதன் ஒரு பகுதியாகவும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் முன் முயற்சியை மேலும் ஊக்குவிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் புதுடில்லியில் ரூபாய் 39,125. 39 கோடி மதிப்பில் ஐந்து முக்கிய கொள்முதல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் பாதுகாப்புத் துறை செயலாளர் கிரிதர் அரமானே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் பரிமாறி கொள்ளப்பட்டன.


மிக்-29 விமானங்களுக்கான ஏரோ- இன்ஜின்களை கொள்முதல் செய்வதற்காக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தங்கள் கையடித்திடப்பட்டது.சி.ஐ.டபிள்.யூ.எஸ். அமைப்பு கொள்முதல் மற்றும் உயர் சக்தி ரேடார் கொள்முதல் செய்வதற்காக லார்சன் அண்ட் டு ப்ரோ லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின .பிரம்மோஸ் ஏவுகணைகள் தொடர்பாக பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இரண்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன .இந்த ஒப்பந்தங்கள் உள்நாட்டு திறன்களை மேலும் வலுப்படுத்தி அந்நிய செலவாணியை சேமித்து வெளிநாடுகளை சார்ந்திருப்பதை குறைக்கும்.


SOURCE :Kaalaimani.com

Next Story
கதிர் தொகுப்பு
Trending News