Kathir News
Begin typing your search above and press return to search.

சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டால் உடனடியாக செய்ய வேண்டிய சில விஷயங்கள்.

சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Sep 2022 1:17 PM GMT

உங்களிடம் உள்ள ஏதேனும் சொத்துக்களை அடக்க வைப்பதும் நினைத்தால் அதற்காக முக்கியமாக தேவைப்படும் ஆதாரங்கள் பத்திரம். இந்த பத்திரம் உங்களுடைய கையில் இருக்க வேண்டும். அசல் பத்திரம் உங்களிடம் இல்லாவிடம் இந்த சொத்துக்கள் பரிவர்த்தனைகள் உங்கள் நிச்சயம் செய்ய முடியாது. குறிப்பாக இன்றைய காலகட்டங்களில் வங்கிகள் முதல் தனியார் நிறுவனங்கள் வரை அனைவரும் உண்மையான சொத்து பத்திரத்தை தான் கேட்கிறார்கள்.


எனவே நீங்கள் வைத்திருக்கும் இந்த சொத்து பத்திரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். எதிர்பாராத வகையில் இந்த சொத்து பத்திரம் தொலைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்தும் உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரி தான் சொத்து பத்திரங்களை உங்களால் உங்கள் வசமாக்கிக் கொள்ள முடியும். அதற்காக சில நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டியதற்கும் அவற்றைப் பற்றி தற்போது பார்க்கலாம். பத்திரம் தொலைந்த உடனே நீங்கள் காவல் நிலையத்தில் FIR ஒன்றை தாக்கல் செய்ய வேண்டுமாம்.


இரண்டாவதாக முக்கியமான நாளிதழ்களில் நீங்கள் உங்களுடைய சொத்து பத்திரங்கள் அடங்கிய தகவலை யாரேனும் கண்டெடுத்தால் உன்னுடைய தொடர்பு கொள்ளலாம் என்று செய்தி வெளியிட வேண்டுமாம். சொத்து விவரங்கள் மற்றும் தொலைந்த ஆவணங்கள், போலீசாரின் FIR நகல் ஒன்று மற்றும் விளம்பர நாளிதழில் செய்தி நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து முத்திரைத்தாளின் ஒப்பந்தம் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட ஒப்பந்த சான்றிதழை நோட்டரி மூலம் சான்றளிக்கப்பட வேண்டும்.

Input & Image courtesy: News 18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News