Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க'விற்கு படையெடுக்கும் மாற்றுக்கட்சியினர் - SG.சூர்யா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த ஆலந்தூர் தொகுதியை சேர்ந்தவர்கள்!

ஆலந்தூர் பகுதியில் நேற்று மாற்று கட்சியை சேர்ந்த பலர் பா.ஜ.க-அவர் இணைந்தனர்.

பா.ஜ.கவிற்கு படையெடுக்கும் மாற்றுக்கட்சியினர் - SG.சூர்யா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்த ஆலந்தூர் தொகுதியை சேர்ந்தவர்கள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  18 Dec 2022 6:55 AM GMT

தமிழகம் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் ஆளும் கட்சியாக இருக்கும் கட்சியில் பல்வேறு சுயேச்சை கவுன்சிலர்கள் மற்றும் அதே கட்சியில் இருக்கும் நபர்கள் தான் இணைவது வழக்கம். ஆனால் ஒருவர் ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிர் கட்சியில் இணைவது என்பது எப்போதாவது அரிதினும் அரிதாக நடைபெறுவது. அந்த வகையில் தற்பொழுது பல்வேறு நபர்கள் பா.ஜ.கவில் இணைந்து இருக்கிறார்கள்.


அந்த வகையில் பா.ஜ.க மாநில செயலாளர் SG.சூர்யா முன்னிலையில் ஆலந்தூர் தொகுதியை சேர்ந்தவர்கள் தங்களை பா.ஜ.க'வில் இணைத்து கொண்டனர். இதனை தனது ட்விட்டர் பதிவில் sg.சூர்யா குறிப்பிட்டுள்ளார்.


பாரதிய ஜனதா கட்சி சார்பில் சென்னை கிழக்கு மாவட்டம் BLA 2 முகவர்கள் பயிலரங்கம் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாநில செயலாளர் SG.சூர்யா மற்றும் மாநில தலைவர் (பிறமொழி பிரிவு) கே.பி.ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.


இது குறித்து ட்விட்டர் பதிவில் SG.சூர்யா குறிப்பிட்டுள்ளதாவது, 'ஆலந்தூர் தொகுதியில் நேற்று மாற்று கட்சியில் இருந்து பல்வேறு நபர்கள் பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார்கள். மேலும் மாற்றுக் கட்சிகள் இருந்து வரும் நபர்களையும் தங்களுடைய இரு கரங்களால் பா.ஜ.க எப்பொழுதுமே வரவேற்க தான் செய்கின்றது. அந்த வகையில் ஆலந்தூர் தொகுதியில் இருக்கும் பல்வேறு நபர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொள்ள முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது' என குறிப்பிட்டுளார்.


Input & Image courtesy: Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News