Kathir News
Begin typing your search above and press return to search.

வீடுகளில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும் - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒரே இணைப்பாக மாற்ற வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வீடுகளில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகளை ஒரே மின்சார இணைப்பாக மாற்ற வேண்டும் - மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

KarthigaBy : Karthiga

  |  7 March 2023 5:45 AM GMT

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியிட்ட கட்டண விகிதப் பட்டியல் மாற்ற உத்தரவில் பிரிவு 5.8.5 அல்லது 8.6 இன் படி ஒரு வீட்டில் அல்லது ஒரு குடியிருப்பில் அல்லது ஒரு இடத்தில் இரண்டு மின் இணைப்புகளை வழங்குவது பற்றியும் ஏற்கனவே இரண்டு அல்லது மேற்பட்ட மின் இணைப்பு இருந்தால் அவற்றை இணைப்பது பற்றியும் மின்வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஒரு வீடு அல்லது ஒரு குடியிருப்பு அல்லது ஒரு இடத்திற்கு ஒரு மின் இணைப்பு மட்டுமே தரப்பட வேண்டும்.


ஏற்கனவே ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தால் அதை முறையாக நோட்டீஸ் கொடுத்து கட்டண விகித பட்டியல் படி 1ஏ-ல் ஒரே மின் இணைப்பாக ஆக்க வேண்டும். நுகர்வோர் இணைப்பதற்கு முன்வராவிட்டால் அதை1-டி கட்டண விகித பட்டியலாக மாற்ற வேண்டும். மேலும் மின்வாரியம், மின் இணைப்பு கொடுக்க அந்த பகுதி வாடகை ஒப்பந்தம் அல்லது குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும்.


சிலர் ஒரே வீட்டில் சொந்த பந்தங்களாக அண்ணன்- தங்கைகள், அக்காள்- தம்பிகள், தந்தை- மகன், தந்தை - மகள் என்று தனித்தனி குடும்பமாக வாழலாம். அங்கு வாடகை ஒப்பந்தமோ குத்தகை ஒப்பந்தமோ வருவதற்கு வாய்ப்பு இல்லை. இதனால் இதுபோன்ற குடும்பங்கள் உள்ள முறையாக பிரிக்கப்பட்ட குடியிருப்பில் அங்கு மற்றொரு கூடுதல் மின் இணைப்பு 2004 மின் பகிர்மான விதியின்படி பெற்றிருந்தால் அந் மாதிரி இடங்களில் தனி ரேஷன் கார்டு இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதன் நோக்கம் என்னவெனில் 100 யூனிட் மானியம் என்பது முறையாக இருக்க வேண்டும் என்பதே ஆகும்.


குடியிருப்புகளில் பொது பயன்பாட்டுக்கான மின்சார இணைப்பு ஒன்று கட்டண விகித பட்டியலாக மாற்றப்பட வேண்டும். ஒரு குடும்பம் உள்ள வீடு அல்லது இடம் அல்லது குடியிருப்பில் கூடுதலாக இருக்கும் மின்சார இணைப்புகளை ஒன்றிணைக்க வேண்டும். அல்லது அவை 1-டி கட்டண விகித பட்டியலாக மாற்றம் செய்ய வேண்டும். அதாவது ஒரு மின்சார இணைப்பு மட்டுமே1-ஏவில் கட்டண விகித பட்டியலாக இருக்க வேண்டும். இது முறையாக தெளிவாக ஆய்வு செய்து அறியப்பட்டு பின்பு அமல்படுத்தப்பட வேண்டும் என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News