Kathir News
Begin typing your search above and press return to search.

இரவில் நகம் வெட்டக்கூடாது- ஆன்மீகம் கூறும் காரணம் என்ன?

பொதுவாக நடைமுறையில் இருட்டிய பிறகு நகங்களை வெட்டக்கூடடாது என பலரும் கூறுவதற்கான சில காரணங்கள் பற்றி காண்போம்.

இரவில் நகம் வெட்டக்கூடாது- ஆன்மீகம் கூறும் காரணம் என்ன?

KarthigaBy : Karthiga

  |  29 Dec 2023 3:45 AM GMT

தமிழ் நாட்டில் மட்டுமன்றி, இந்தியாவின் பல மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் கூட இரவிலோ அல்லது சூரியன் மறைந்த பிறகோ நகம் வெட்டும் பழக்கத்தினை பலர் வைத்துக்கொள்வதில்லை. இதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தினை கூறுவர். அப்படி பொதுவாக கூறப்படும் ஐந்து காரணங்களை இங்கு பார்ப்போம்.


இந்து புராணம் மற்றும் ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில் நகத்தை கட்டுவது நல்ல ஆற்றல்களுடன் தொடர்புடையதாக உள்ளதாம். இதை நிலவின் ஆற்றலுடனும் பலர் தொடர்பு படுத்தி கொள்கின்றனர். நிலவின் ஆற்றல் அமைதியை அளித்து, குழப்பத்தை நீக்கும் வகையில் இருக்குமாம். ஆயுர்வேதத்தை பொறுத்தவரை நிலவின் ஆற்றல் இரவில்தான் அதிகமாக இருக்குமாம். அதனால், இரவில் நகம் வெட்டுவதால் இந்த ஆற்றலை கெடுக்க கூடும் என கூறப்படுகிறது. இது, நமது ஒட்டுமொத்த உடல் நலனையும் பாதிக்க வாய்ப்புள்ளதாம்.


மாலையில் நகம் வெட்டுவதைத் தவிர்ப்பதற்குப் பின்னால் உள்ள மற்றொரு நடைமுறைக் காரணமும் உள்ளது. அது, சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பானதாகும். நம் கைகள் மற்றும் கால்கள் நாள் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து தொடர்பு கொள்கின்றன. நமது நகங்களின் கீழ் அழுக்கு, கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் குவிகின்றன. கை கழுவாமல் மாலையில் நகங்களை வெட்டுவது நம் முகத்தையும் வாயையும் அடிக்கடி தொடுவதால் இந்த தீங்கு விளைவிக்கும் ஏதேனும் பாதிப்புகள் நம் உடலில் வரும் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, காலை வரை காத்திருந்து கை, கால்களை சுத்தமாக கழுவிய பிறகு நகத்தை வெட்டலாம்.


அன்மிக ரீதியாக இரவில் நகம் வெட்டக்கூடாததற்கு விளக்கங்கள் இருந்தாலும், பொதுவாக கூறப்படும் சில கருத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, இரவில் துஷ்ட சக்திகள் பல உலாவும் எனவும் இதனால் இரவில் நகத்தை வெட்டும் போது அந்த சக்திகளை நாம் ஈர்க்க கூடும் என்றும் கூறப்படுகிறது. நகம் வெட்டுவது என்பது, நம்மிடம் இருக்கும் ஒரு விஷயத்தை தனியே வெட்டி எடுப்பது போன்றதாகும். எனவே, இரவில் நகத்தை வெட்டுவதால் துரதிர்ஷ்டத்தை நம் பக்கம் ஈர்த்துவிடுவோம் என்று கூறப்படுகிறது.


மாலையில் நகங்களை வெட்டுவதைத் தவிர்ப்பதை ஆதரிக்கும் வகையில் சில காரணங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, குறைந்த வெளிச்சத்தில் நகங்களை வெட்டுவது ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஏனெனில் போதுமான வெளிச்சம் இல்லாததால், தற்செயலாக நாம் எங்காவது வெட்டு போட்டுக்கொள்ள வாய்ப்புண்டு. இதனால் காயங்களும் ஏற்படலாம்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News