Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் பாடிய தேசிய கீதம் - சுதந்திர தினத்தில் அசத்திய தெலுங்கானா அரசு

தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் இணைந்து பாடிய தேசிய கீதம் பரபரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் பாடிய தேசிய கீதம் - சுதந்திர தினத்தில் அசத்திய தெலுங்கானா அரசு

Mohan RajBy : Mohan Raj

  |  17 Aug 2022 3:24 PM GMT

தெலுங்கானாவில் ஒரே நேரத்தில் 28 லட்சம் பேர் இணைந்து பாடிய தேசிய கீதம் பரபரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்தியாவின் 75வது சுதந்திர அமுதவிழா கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், வித்தியாசமான முயற்சிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறைகள், வயல்வெளிகளில் காலை 11:30 மணியளவில் தேசிய கீதம் ஒலித்தது.

ஹைதராபாத் மெட்ரோ ரயில் 58 வினாடிகளுக்கு நிறுத்தப்பட்டு ஊழியர்களும், பயணிகளும் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடினர்.

பதினோரு ஆயிரங்களுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடப்பட்டதாகவும் 28 லட்சம் பேரை இதில் பங்கேற்றதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Source - Polimer News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News