Kathir News
Begin typing your search above and press return to search.

திருச்சியில் 2-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் புதிய விமான முனையம் மற்றும் 19,850 கோடி திட்டங்கள்!

பிரதமர் மோடி இரண்டாம் தேதி திருச்சி வருகிறார். முன பிரம்மாண்ட விழாவில் 19850 கோடியில் புதிய மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.

திருச்சியில் 2-ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் புதிய விமான முனையம் மற்றும் 19,850 கோடி திட்டங்கள்!

KarthigaBy : Karthiga

  |  1 Jan 2024 11:00 AM GMT

சென்னையை அடுத்து வளர்ந்து வரும் பெரு நகரமாக திருச்சி திகழ்ந்து வருகிறது . நாளுக்கு நாள் விமான பயணிகள் எண்ணிக்கை உயர்ந்து வரும் நிலையில் இங்களுள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதனை அடுத்து புதிய விமான நிலையம் முனையம் கட்ட இந்திய விமான நிலைய ஆணைய குழுமம் ரூபாய் 951 கோடி ஒதுக்கீடு செய்தது. 2019 ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் தொடங்கின. பின்னர் கூடுதலாக ரூபாய் 249 கோடி செலவு செய்து கட்டுமான பணிகள் ரூபாய் 1200 கோடியை நிறைவு பெற்றுள்ளது. பு


திய முனையம் 60 ஆயிரத்து 723 சதுர மீட்டர் பரப்பளவில் இரண்டு அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் நான்காயிரம் சர்வதேச பயணிகளையும் 1500 உள்ளாட்டு பயணிகளையும் கையாள முடியும். இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான முனைய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திருச்சிக்கு வருகை புரிகிறார்.


அங்கிருந்து கார் மூலம் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார் . அங்கு நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் . பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கு நடக்கும் பிரமாண்ட விழாவில் புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார் . திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ள திட்ட பணிகளின் விவரம் வருமாறு :-


திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் மத்திய அரசு நிதியில் ரூபாய் 41 கோடி மதிப்பீட்டில் 253 அறைகளுடன் நான்கு மாடியில் கட்டப்பட்ட 506 மாணவர்கள் தங்குவதற்கான விடுதியை திறந்து வைக்கிறார். மேலும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் செங்கல்பட்டு முதல் எண்ணூர் திருவள்ளூர் - பெங்களூரு- புதுச்சேரி- நாகப்பட்டினம் -மதுரை- தூத்துக்குடி வரை 48 கிலோமீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இன் 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா - தர்மபுரி மல்டி ப்ராடக்ட் பெட்ரோலிய குழாய் திட்டம் ஆகிய இருத்திட்டங்களும் முக்கியமானவை ஆகும் .


ரூபாய் 9000 கோடியில் முடிவுற்ற இந்த திட்டங்களையும் கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் 400 கோடியில் உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மற்றும் மறு சுழற்சி குழாயையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணிக்கிறார். சேலம்- மேக்னசைட் சந்திப்பு, ஓமலூர்- மேட்டூர் அணை பிரிவில் 41.4 கிலோ மீட்டர் இருட்டு அறையில் பாதை திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோமீட்டர் தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம் , திருச்சி மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல் ,விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை- தென்காசி சந்திப்பு, நெல்லை- திருச்செந்தூர் பாதை மின்மயமாக்கல் ஆகிய திட்டங்களையும் நாட்டுக்கு அர்பணிகிறார்.


இதே போல் தேசிய நெடுஞ்சாலை 81 திருச்சி கல்லகம் பிரிவில் 39 கிலோமீட்டர் 4 வழி சாலை, தேசிய நெடுஞ்சாலை 81 கல்லகம் மீன் சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்துக்கு ந?4/2 இரண்டு வழி சாலை தேசிய நெடுஞ்சாலை 785 இல் செட்டிகுளம் நத்தம் பிரிவின் 29 கிலோமீட்டர் 4வழிச் சாலை தேசிய நெடுஞ்சாலை, 536 காரைக்குடி ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோமீட்டர் இருவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 179 ஏ சேலம்- திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் 44 கிலோ மீட்டர் நிலத்திற்கு நான்கு வழிச்சாலை ஆகியவற்றையும் நாட்டுக்கு அர்பணிக்கிறார்.


இந்த சாலை திட்டங்கள் திருச்சி ஸ்ரீரங்கம், சிதம்பரம் ,ராமேஸ்வரம் தனுஷ்கோடி ,உத்திரகோசமங்கை, தேவிபட்டினம், ஏர்வாடி ,மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களில் இணைப்பை மேம்படுத்த உதவும். இதே போல் இந்திய எரிவாயு ஆணையத்தால் கொச்சி - கூத்தநாடு பெங்களூரு- மங்களூர் எரிவாயு குழாய் இரண்டு திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோவை வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டங்களுக்கும் சென்னை வல்லூரில் தரைவழி முனையத்துக்கான பொது தரத்தில் மல்டி ப்ராடக்ட் குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார் .


தேசிய நெடுஞ்சாலை 332 ஏ வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோமீட்டர் நீளத்துக்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும் .உலக பாரம்பரிய தளமான மாமல்லபுரத்துக்கு இந்த திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும் .அத்துடன் கல்பாக்கம் அணுமினௌ நிலையத்துக்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும். மேற்கண்ட திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News