Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் முதல் முறையாக புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி தலைமையில் 30- ஆம் தேதி திறப்பு விழா!

அயோதியில் வருகிற 30-ஆம் தேதி பிரதமர் மோடி புதிய விமான நிலையத்தை தொடங்கி வைக்கிறார்.

அயோத்தியில் முதல் முறையாக புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி தலைமையில் 30- ஆம் தேதி திறப்பு விழா!

KarthigaBy : Karthiga

  |  25 Dec 2023 12:30 PM GMT

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் முதல்முறையாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி அடுத்த மாதம் நடப்பதால் அதற்கு முன்பு விமான நிலையம் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறது 30ஆம் தேதி அயோத்தி விமான நிலையம் திறக்கப்படுகிறது. பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அயோத்திக்கான முதல் விமானம் டெல்லியில் இருந்து 30 ஆம் தேதி காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 11 20 மணிக்கு அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்குகிறது.


விமான நிலைய திறப்பிற்கு பிறகு பிரதமர் மோடி வாகன பேரணியாக மறுசீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்துக்கு செல்கிறார். விமான நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அதை பிரதமர் திறந்து வைக்கிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் .அயோத்தி ரயில் நிலையம் விமான நிலையம் இடையே 5 கிலோ மீட்டர் நீளம் மேம்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுகிறார்.


பின்னர் மீண்டும் அயோத்தி விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வருகிறார். வழியில் 51 இடங்களில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .துறவிகளும் சாதுக்களும் பிரதமருக்கு ஆசி வழங்குவார்கள். அயோத்தி விமான நிலையத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அயோத்தி அனுமன் கோவிலுக்கும் அவர் செல்கிறார்.


SOURCE :DAILY THANTHI

Next Story
கதிர் தொகுப்பு
Trending News