Kathir News
Begin typing your search above and press return to search.

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத் தலைவராக இந்தியப் பெண் நியமனம்

நியூயார்க் ரிசர்வ் வங்கியில் துணை தலைவராகவும், தலைமை செயல்பாட்டு அதிகாரியாகவும் இந்திய பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணைத் தலைவராக இந்தியப் பெண் நியமனம்

KarthigaBy : Karthiga

  |  10 Dec 2022 10:30 AM GMT

அமெரிக்காவில் உள்ள 12 மத்திய ரிசர்வ் வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணைத்தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுஷ்மிதா சுக்லா என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 54 வயதான சுஷ்மிதா காப்பீட்டு துறையில் அனுபவம் மிக்கவர் ஆவார்.


சுஷ்மிதா நியமனத்தை நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர்கள் குழு அங்கீகரித்துள்ளதாகவும், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் அவர் பதவியேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுஷ்மிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் "நியூயார்க் மத்திய ரிசர் வங்கி போன்ற பணி சார்ந்த அமைப்பில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றதற்கு நான் பெருமைப்படுகிறேன். எனது அனுபவங்கள் மற்றும் பாடங்களைக் கொண்டு வங்கியின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் தேவையான தலைமை பண்புடன் செயல்படுவேன்" என குறிப்பிட்டுள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News