இஸ்ரோ அறிவித்த மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தி!
By : Sushmitha
பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து விலகி ஆதித்யா எல் 1 விண்கலம் லாக்கராஞ்சியன் புள்ளி 1 ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த மாதம் இரண்டாம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் சதீஷ் தவான் ஏவுதலத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்வதற்காக பி எஸ் எல் வி சி 57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதற்குப் பிறகு பூமியிலிருந்து 125 நாட்கள் விண்கலம் பயணம் செய்து 15 லட்சம் கிலோ மீட்டருக்கு தொலைவில் உள்ள லாக்ரஞ்சியன் புள்ளி 1 ஐ சென்றடையும் அங்கிருந்து தான் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் பணியை தொடங்கும் என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் பூமியை விண்கலம் ஐந்து முறை சுற்றி வரும் அப்படி சுற்றி வரும் பொழுது ஒவ்வொரு முறையும் அதன் உயரம் உயர்த்தப்படும் அதுவும் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது அதற்குப் பிறகு தற்போது பூமியின் ஈர்ப்பு மண்டலத்திலிருந்து விண்கலம் விலகி வெற்றிகரமாக லாக்ரஞ்சியன் புள்ளி 1 ஐ நோக்கி ஆதித்யா எல் ஒன் சென்று கொண்டிருக்கிறதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த சந்தோஷமான செய்தியை இஸ்ரோ தனது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு ஆதித்யா எல் ஒன் அடைந்த வெற்றியை பகிர்ந்துள்ளது.
Source - Daily Thanthi