Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து எல்லையில் தீபாவளி.. பாதுகாப்புப் படையினருடன் கொண்டாடிய பிரதமர்..

தொடர்ந்து எல்லையில் தீபாவளி.. பாதுகாப்புப் படையினருடன் கொண்டாடிய பிரதமர்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 Nov 2023 7:17 AM GMT

பிரதமர் நரேந்திர மோடி நேற்று தீபாவளியை முன்னிட்டு இமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் தீரமிக்க வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர், தீபாவளி பண்டிகையின் ஒருங்கிணைப்பும், வீரர்களின் தைரியத்தின் எதிரொலிகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அறிவொளியின் தருணம் என்று குறிப்பிட்டார். நாட்டின் கடைசி கிராமமான எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த கிராமங்கள் இப்போது முதல் கிராமமாகக் கருதப்படுகிறது. அங்கு வீரர்களுக்கு பிரதமர் தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.


தமது அனுபவத்தை நினைவு கூர்ந்த பிரதமர், குடும்பம் எங்கு இருக்கிறதோ அங்கெல்லாம் விழாக்கள் நடைபெறுவதாகக் கூறினார். ஆனால், கடமையின் மீதான பக்தியின் காரணமாக, எல்லையைப் பாதுகாப்பதற்காக பண்டிகை நாளில் குடும்பத்தை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையில், 140 கோடி இந்தியர்களை தங்கள் குடும்பமாக கருதும் உணர்வு பாதுகாப்பு படையினருக்கு ஒரு நோக்க உணர்வை அளிக்கிறது என்று அவர் கூறினார். இதற்காக நாடு உங்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு வீட்டிலும் உங்கள் பாதுகாப்பிற்காக ஒரு 'தீபம்' ஏற்றப்படுகிறது", என்று அவர் கூறினார். "வீரர்கள் பணியமர்த்தப் படும் இடம் எனக்கு எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல. நீங்கள் எங்கிருந்தாலும் என் திருவிழா அங்கே உண்டு. இது அநேகமாக 30-35 ஆண்டுகளாக நடந்து வருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.


ராணுவ வீரர்களுக்கும், ராணுவ வீரர்களின் தியாக மரபுக்கும் பிரதமர் மரியாதை செலுத்தினார். "நமது துணிச்சலான வீரர்கள் எல்லையில் வலுவான சுவர் என்பதை நிரூபித்துள்ளனர்", என்று அவர் கூறினார். "தோல்வியின் தாடைகளில் இருந்து வெற்றியைப் பறித்து நமது துணிச்சலான வீரர்கள் எப்போதும் குடிமக்களின் இதயங்களை வென்றுள்ளனர்" என்று தேசத்தைக் கட்டமைப்பதில் ஆயுதப்படைகளின் பங்களிப்பை எடுத்துரைத்த பிரதமர் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News