Kathir News
Begin typing your search above and press return to search.

மோடி அரசின் இரட்டை எஞ்சின் ஆட்சினா சும்மாவா.. மக்களுக்கு கிடைத்த ஏராள திட்டங்கள்..

மோடி அரசின் இரட்டை எஞ்சின் ஆட்சினா சும்மாவா.. மக்களுக்கு கிடைத்த ஏராள திட்டங்கள்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Nov 2023 2:00 AM GMT

மத்திய மாநில அரசுகள் இணைந்து செயல்பட்டால் சிறப்பான வளர்ச்சியை அடைய முடியும். இது தான் இரட்டை எஞ்சின் ஆட்சி எனப்படுகின்றது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். திம்மநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சிய வாகன பயணத் துவக்க விழாவில் உரையாற்றிய போது டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் இவ்வாறு தெரிவித்தார். நமது பிரதமருக்கு பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் மீது தனி அக்கறை உள்ளது. அவர்களின் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு அவர் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். முத்ரா வங்கி கடன் திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 24 லட்சம் கோடி ரூபாய் வழங்கப் பட்டுள்ளது.


இதில் சுமார் 50% தொகை பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் எந்தவித பாகுபாடும் இல்லாமல் உயரிய மருத்துவ சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதார காப்பீட்டு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம். திட்டத்தின் பெயர்கள் இந்தியில் உள்ளன அதை பயன்படுத்தும் போது, நாம் மக்களுக்கு புரியும் வகையில் தமிழிலும் அந்த பெயரை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் . குறிப்பாக ஜல்ஜீவன் இயக்கம் என்பதை இல்லம் தோறும் இனிய குடிநீர் என்று எழுதலாம் என டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மேலும் தெரிவித்தார்.


முதலமைச்சர் ரங்கசாமி தனது தலைமையுரையில் நமது நாடு எல்லா நிலைகளிலும் எல்லா துறைகளிலும் சீரிய வளர்ச்சியை அடைய வேண்டும் என்று கருதி பிரதமர் நரேந்திர மோடி எடுக்கும் முயற்சிகள் பாராட்டத் தக்கவையாக உள்ளன என்று தெரிவித்தார். அரசுகள் அறிவிக்கின்ற திட்டங்கள் அனைத்தும் அனைவருக்கும் சென்று சேரும்போதுதான் வளர்ச்சி என்பது சாத்தியமாகும். மக்களுக்கு அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்த விழிப்புணர்வு வாகன யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தரும் நிதி உதவியோடு மாநில அரசின் நிதி உதவியும் சேரும் போது ஒரு பயனாளிக்கு முழுமையான உதவி கிடைக்கின்றது. உதாரணமாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்குகின்றது. மாநில அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு தனது பங்கையும் சேர்த்து ரூ.3 லட்சம் வரை வழங்குகிறது. பழங் குடியினருக்கு தனது பங்கையும் சேர்த்து ஐந்து லட்சம் ரூபாய் வரை வழங்குகிறது என முதலமைச்சர் ரங்கசாமி மேலும் தெரிவித்தார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News