Kathir News
Begin typing your search above and press return to search.

கோரிக்கை வைத்த ராமநாதபுர மக்கள்.. உடனடியாக டெல்லி வரை எடுத்துச்சென்ற நிர்மலா சீதாராமன்..

கோரிக்கை வைத்த ராமநாதபுர மக்கள்.. உடனடியாக டெல்லி வரை எடுத்துச்சென்ற நிர்மலா சீதாராமன்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  29 Nov 2023 3:04 PM GMT

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த பொழுது அங்கு இருக்கும் மக்கள் அவரிடம் வைத்த புகாரை தற்பொழுது உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து இருக்கிறார். இந்த அதிகாரப்பூர்வமான சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறும் பொழுது, "தமிழகத்தின் இலந்தை, கானனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை ஆகிய கிராமங்களுக்கு இருப்புப் பாதையை கடந்து செல்ல தற்போதுள்ள சுரங்கப்பாதைதான் ஒரே வழி என்றும் ஆண்டு முழுவதும் பெரும்பாலான மாதங்களில் அதில் தண்ணீர் நிரம்பி வழிகிறது என்றும் என்னிடம் ரமேஸ்வரம் சென்றிருந்தபோது, ​அந்த கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.



ஆகவே மக்களின் குறைகள் தீர்க்க, தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இலந்தை கிராமத்தில் ரயில்வே கிராசிங்கின் கீழ் சுரங்கப்பாதைக்கு பதிலாக, பாதுகாப்புடன் கூடிய ரயில்வே கேட், அல்லது மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சரிடம், மத்திய நிதியமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்". மாண்புமிகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமேஸ்வரம் சென்றிருந்தபோது மக்களை சந்தித்ததில் அங்குள்ள மக்கள் எங்களின் ஊரில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு தற்போதுள்ள சுரங்கப்பாதைதான் ஒரே வழி என்று கிராம மக்கள் நிதியமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.


ஆண்டு முழுவதும் மழைகாலங்களில் வெள்ளநீர் சூழ்ந்துவிடுகிறது, அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் தற்போதுள்ள சுரங்கப்பாதை வழியாக தண்ணீரில் தத்தளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுதத்தன் காரணமாக தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள லந்தை கிராமத்தில் உள்ள ரயில்வே கிராசிங்கில் ஆட்கள் கொண்ட கேட் அமைக்குமாறு மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னவிடம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News