மூன்று மாநில தேர்தலில் பாஜக வென்ற சாதனை! பின்வாங்கும் இண்டி கூட்டணி..
By : Sushmitha
வருகின்ற 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைத்து விடக்கூடாது! என்ற நோக்கத்தோடு இந்தியா முழுவதும் உள்ள 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டணி அமைத்தது. இந்த கூட்டணியில் உள்ள கட்சிகளை இணைக்கும் வேலைகளில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் முக்கிய பங்காளிகள். இந்த கூட்டணிக்கு I.N.D.I.A என்றும் பெயரிடப்பட்டது. இந்த கூட்டணி அமைக்கப்பட்டு மூன்று கூட்டம் நடந்து முடிந்த நிலையில் இதன் நான்காவது கூட்டம் டிசம்பர் ஆறாம் தேதி நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு இண்டி கூட்டணி சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது, மேலும் கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால் இந்த கூட்டத்திற்கு அழைப்புகள் கிடைக்கவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்த நிலையில் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் மற்றும் நிதீஷ் குமார் போன்றோர் கூட்டத்தில் கலந்து கொள்ள போவதில்லை என தகவல் வெளியானது. இதற்கிடையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் தேர்தலில் பாஜக அமோக வெற்றி அடைந்ததால் இண்டி கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இப்படி ஒரு பேச்சு அடிபட்டு வரும் நிலையில் முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல் இருந்தால் அது சரியாக இருக்காது என ஆலோசிக்கப்பட்டு இண்டி கூட்டணியின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதாரம்: தி இந்து தமிழ்த்திசை