Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை மக்களை மீட்கும் பணியில் சத்தமில்லாமல் இறங்கி வேலைப்பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்....இத்தனை முகாம்களா!

சென்னை மக்களை மீட்கும் பணியில் சத்தமில்லாமல் இறங்கி வேலைப்பார்க்கும் ஆர்.எஸ்.எஸ்....இத்தனை முகாம்களா!

SushmithaBy : Sushmitha

  |  9 Dec 2023 12:54 PM GMT

மிக்ஜம் புயலால் கனமழைக்கு வித்திட்டு வெள்ளத்தில் இருந்து மீளாத சென்னை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சில தன்னார்வ தொண்டு தரப்பில் ஆங்காங்கே வழங்கப்பட்டு வரும் நிலையில் குரோம்பேட்டை, கொளத்தூர், பள்ளிக்கரணை, வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு பொருட்களை ஆர்எஸ்எஸ் செய்து வருகிறது. முகாம்களில் தங்கியிருக்கும் பொதுமக்கள் அனைவருக்கும் தேவையான உணவுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகிகளே செய்து விநியோகித்து வருகின்றனர்.


இப்படி ஆர்எஸ்எஸ் அமைப்பால் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள் ஒவ்வொன்றிலும் சுமார் 1,500 முதல் 2,000 உணவுகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதுமட்டுமின்றி 9841987589, 9994128658 ஆகிய தொலைபேசி எண்களை மக்கள் தொடர்பு கொண்டு நிவாரண உதவிகளைப் பெறலாம் என்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். மேலும் பள்ளிக்கரணை, வேளச்சேரி, மடிப்பாக்கம் போன்ற மழைநீர் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களையும் படகுகள் மூலம் மீட்டு வந்து முகாம்களில் தங்க வைக்கின்றனர்.

ஆதாரம்: தி இந்து தமிழ்த்திசை

Next Story
கதிர் தொகுப்பு
Trending News