Kathir News
Begin typing your search above and press return to search.

வெள்ளத்தில் இருந்து மீண்ட திருவெற்றியூர் பகுதி மக்களுக்கு ஆயில் கழிவுகளால் ஏற்பட்ட பெரும் பாதிப்பு!

வெள்ளத்தில் இருந்து மீண்ட திருவெற்றியூர் பகுதி மக்களுக்கு ஆயில் கழிவுகளால் ஏற்பட்ட பெரும் பாதிப்பு!

SushmithaBy : Sushmitha

  |  10 Dec 2023 12:51 PM GMT

சென்னையில் கொட்டி தீர்த்த மழையால் சென்னை பகுதி முழுவதும் மழை நீர் வெள்ளத்தில் தத்தளித்தது. மழை நின்று ஆறு நாட்களுக்குப் பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப சென்னை மக்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், மிக்ஜம் புயலின் மழையால் புழல், பூண்டி ஆகிய ஏரிகளில் இருந்து உபரி நீரானது 48 ஆயிரம் கன அடி வரை திறக்கப்பட்டது. ஏரியில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் கடைமடை பகுதிகளான மணலிபுதுநகர், சடையங்குப்பம், பர்மா நகர், மணலி, திருவெற்றியூர் மேற்கு மற்றும் எர்ணாவூர் போன்ற பகுதிகள் முழுவதும் நான்கு அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியிருந்தது.

இந்த பகுதிகள் முழுவதும் தேங்கியிருந்த வெள்ளத்தில் ஆயில் கழிவுகள் கலந்து வந்ததாகவும் இதனால் சாலைகள் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கண்டெய்னர் லாரி போன்ற அனைத்தும் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி திருவெற்றியூர் மேற்கு மற்றும் எர்ணாவூரில் இருந்த 30,000 மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் ஆயில் கழிவுகள் படிந்துள்ளது, அதனை சுத்தம் செய்ய முடியாததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அனைவருக்கும் வாந்தி, தலைசுற்றல், மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்!

வெள்ளத்தில் இருந்து மீண்டு வந்தால் ஆயுள் கழிவுகளால் இது போன்ற பாதிப்பு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News