Kathir News
Begin typing your search above and press return to search.

தரமாக இறங்கிய பிரசாந்த் இலகுரக ஹெலிகாப்டர் - உள்நாட்டு உற்பத்தியில் அதிரடி காட்டும் இந்தியா!

தரமாக இறங்கிய பிரசாந்த் இலகுரக ஹெலிகாப்டர் - உள்நாட்டு உற்பத்தியில் அதிரடி காட்டும் இந்தியா!

SushmithaBy : Sushmitha

  |  11 Dec 2023 1:30 AM GMT

உலக நாடுகள் மத்தியில் இந்தியா தனது பொருளாதார நிலையை உயர்த்தி உள்ள நிலையில் தனது ராணுவ தளவாடங்கள் மற்றும் திறனையும் மேம்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் ராணுவ ஆய்வாளர் விஜேந்திர கே தாகூர் தற்பொழுது இலகுரகப் போர் ஹெலிகாப்டர் என்ற பிரசாந்த் ஹெலிகாப்டர் குறித்தும் அதன் திறன் குறித்தும் தெரிவித்துள்ளார். இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கடந்த நவம்பர் 30ம் தேதி அன்று 156 பிரசாந்த் லைட் காம்பேக்ட் ஹெலிகாப்டரை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் முடிந்து வாங்கப்பட்டுள்ளது.

மேலும் பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளதால் மற்ற தேசம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளது, ஏனென்றால் மற்ற நாடுகளிலிருந்து ஆயுத அமைப்புகள் வாங்கப்படும் பொழுது அந்த நாட்டில் என்ன அமைப்பு உள்ளதோ அதற்கு ஏற்றார் போல் நம் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். ஆனால் தற்பொழுது நம் நாட்டிலே நமக்கு தேவையான அனைத்து ஆயுதங்களும் தயார் செய்யப்பட்டு ராணுவத்திற்கு தேவையான ஆயுத அமைப்புகள் தயாரிக்கப்படுகிறது, அதன் ஒரு வெளிப்பாடு இந்த பிரசாந்த் இலகுரக போர் ஹெலிகாப்டர்.

அதோடு இந்த பிரசாந்த் ஹெலிகாப்டர் 5.8 டன் குறைந்த கவனிக்கக்கூடிய வடிவமைப்பு காட்சி, செவிவழி, ரேடார் மற்றும் அகச்சிவப்பு கையொப்பங்களை கொண்டது. மேலும் இந்த ஹெலிகாப்டர் அதிகபட்ச வேகமாக ஒரு மணி நேரத்திற்கு 275 கிலோ மீட்டர் வேகத்திலும் 500 கிலோ மீட்டர் போர் ஆரம் மற்றும் 16000 முதல் 18000 அடி வரை செயல்பாட்டு உச்சவரம்புடன் அதிக உயரத்திற்கு போர் செய்யும் திறனையும் ஹெலிகாப்டரின் பக்கங்கள் அனைத்தும் கவச முலாம் பொருத்தப்பட்டு சிறந்த உயிர் வாழ்விற்காக விபத்திற்கு தகுதியான தரையிறங்கும் கியருடன் தயாரிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

Source : India defence news

Next Story
கதிர் தொகுப்பு
Trending News