Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் குவாட் உச்சிமாநாடு.. ஜனவரியில் நடைபெறுமா? ஒத்தி வைக்கப்படுமா?

இந்தியாவில் குவாட் உச்சிமாநாடு.. ஜனவரியில் நடைபெறுமா? ஒத்தி வைக்கப்படுமா?

Bharathi LathaBy : Bharathi Latha

  |  14 Dec 2023 1:21 AM GMT

2024 குவாட் உச்சிமாநாடு இந்தியா நடத்தும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது திட்டமிட்டபடி ஜனவரியில் நடைபெறாது. ஆனால் அடுத்த ஆண்டு பிற்பகுதியில் நடைபெறலாம் என்று டெல்லியில் இருந்து தகவல்கள் வெளிவந்து இருக்கிறது. இந்த சந்திப்பு 2024 பிற்பகுதியில் நடைபெறும் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி தி ஹிந்து செய்தியை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த மாநாடு நடைபெறுவது குறித்த பல்வேறு நாடுகளின் விவரங்களும் அடங்கி இருக்கிறது.


இது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் குடியரசு தினத்தன்று இந்தியாவிற்கு வரமாட்டார்கள் என்பதை இது குறிக்கிறது. இது புதுதில்லியால் முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது. குடியரசு தின அணிவகுப்பில் தலைமை விருந்தினராக கலந்து கொள்வதற்கான இந்தியாவின் அழைப்பை ஏற்று 2024 ஜனவரியில் நடக்கும் குவாட் உச்சி மாநாட்டில் பிடென் பங்கேற்பாரா? என்பது குறித்து, இறுதி முடிவு தற்போது வரை வெளியிடப் படவில்லை.


இந்தியாவின் குடியரசு தினத்தின் அதே நாளில் அனுசரிக்கப்படும் போது தான் ஆஸ்திரேலியாவின் தேசிய தினமும் கொண்டாடப்படுகிறது, இதனால் அல்பானீஸ் இந்தியாவிற்கு பயணம் செய்வதும் தற்போது வரை நிச்சயமாக தெரியவில்லை. மே மாதம் ஜப்பானில் ஜி-7 மாநாட்டை ஒட்டி நடந்த குவாட் தலைவர்கள் கூட்டத்தின் போது, ​​அடுத்த குவாட் தலைவர்கள் மாநாட்டை இந்தியா நடத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News