Kathir News
Begin typing your search above and press return to search.

தற்சார்பு இந்தியாவாக சுழலும் உற்பத்தி சக்திகள்.. மோடி அரசின் திட்டத்தினால் வலுப்பெறும் ஏற்றுமதி..

தற்சார்பு இந்தியாவாக சுழலும் உற்பத்தி சக்திகள்.. மோடி அரசின் திட்டத்தினால் வலுப்பெறும் ஏற்றுமதி..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Dec 2023 1:09 AM GMT

உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைத் திட்டம் 'தற்சார்பாக' மாறுவதற்கான இந்தியாவின் பார்வையைக் கருத்தில் கொண்டு, உற்பத்தி திறன்கள் மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்த ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டில் 14 முக்கிய துறைகளுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இந்தத் துறைகளில் திட்டம் இந்திய உற்பத்தியாளர்களை உலக அளவில் போட்டியிட வைக்கவும், முக்கிய திறன் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத் துறைகளில் முதலீட்டை ஈர்க்கவும் தயாராக உள்ளது.


இந்தத் திட்டத்தின் கீழ் நவம்பர் 2023 வரை, 746 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 150 க்கும் அதிகமான மாவட்டங்களில் பி.எல்.ஐ அலகுகள் நிறுவப் பட்டுள்ளன. செப்டம்பர் 2023 வரை ரூ.95,000 கோடிக்கு மேல் முதலீடு பதிவாகியுள்ளது, இது ரூ.7.80 லட்சம் கோடி விற்பனைக்கும், 6.4 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் வழிவகுத்தது. ஏற்றுமதி ரூ.3.20 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.2,900 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன. மொபைல் உற்பத்தியில் 3 ஆண்டுகளில் 20% மதிப்புக் கூட்டல் ஏற்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் 101 பில்லியன் டாலர் மொத்த மின்னணு உற்பத்தியில், ஸ்மார்ட்போன்கள் ஏற்றுமதியாக 11.1 பில்லியன் டாலர் உட்பட 44 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.


ஸ்டார்ட் அப்களுக்கான நிதி திட்டத்தின் கீழ், 129 மாற்று முதலீட்டு நிதிகளுக்கு சுமார் ரூ.10,229 கோடியை அரசு உறுதியளித்துள்ளது. 915 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ.17,272 கோடியை எ.ஐ.எஃப் முதலீடு செய்துள்ளது. ஸ்டார்ட் அப் இந்தியா தொடக்க நிதி திட்டத்தின் கீழ் 192 தொடக்க நிலை நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.747 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 1,579 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.291 கோடிக்கு ஒப்புதல் அளித்துள்ளன. ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம், உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுப்பதன் மூலம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சீரான பிராந்திய வளர்ச்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கு நாட்டின் 767 மாவட்டங்களில் 1,200 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News